Surah An-NabaBegins here at 78:1
-
78:1
عَمَّ يَتَسَآءَلُونَ
ʻAMMA yatasaaaʹaloon?
(நபியே!) எதைப்பற்றி அவர்கள் (தங்களுக்குள்) கேட்டுக் கொள்கின்றனர்?
-
78:2
عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ
ʻAnin Nabaʹil ʻAz̤̣eem,
மகத்தான செய்தியைப் பற்றிய(ல்லவா)!
-
78:3
ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
ʹAllaẓee hum feehi mukhtalifoon.
அதைப்பற்றி அவர்கள் (உண்மைக்கு) முரணான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்.
-
78:4
كَلَّا سَيَعْلَمُونَ
Kallaa sayaʻlamoon!
(தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்.
-
78:5
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
S̤umma kallaa sayaʻlamoon!
பின்னர், அவசியம் அதிசீக்கிரத்தில் (அதன் உண்மையை) நன்கு அறிந்து கொள்வார்கள்.
-
78:6
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَـٰدًا
ʹAlam najʻalil ʹarḍa mihaadaa,
(இவ்வளவு பெரிய) பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக அமைக்க வில்லையா?
-
78:7
وَٱلْجِبَالَ أَوْتَادًا
Wal-jibaala ʹawtaadaa,
இன்னும், (அதில் நாம்) மலைகளை முளைகளாக (நிறுத்தவில்லையா?)
-
78:8
وَخَلَقْنَـٰكُمْ أَزْوَٰجًا
Wa-khalaq̣naakum ʹazwaajaa,
ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கிறோம்.
-
78:9
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
Wa-jaʻalnaa nawmakum subaataa;
நாமே உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம்.
-
78:10
وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا
Wa-jaʻalnal layla libaasaa,
நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக ஆக்கினோம்.
-
78:11
وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا
Wa-jaʻalnan nahaara maʻaashaa?
நாமே பகலை (உங்கள்) வாழ்வைத் தேடிக்கொள்ளும் நேரமாக்கினோம்.
-
78:12
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
Wa-banaynaa fawq̣akum sab-ʻañ shi-daadaa,
உங்களுக்கு மேலிருக்கும் பலமான ஏழு வானங்களையும் நாமே அமைத்தோம்.
-
78:13
وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
Wa-jaʻalnaa Siraajañw wah-haajaa?
அதில் (சூரியனைப்) பிரகாசிக்கும் தீபமாக அமைத்தோம்.
-
78:14
وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا
Wa-ʹañzalnaa minal muʻṣiraati maaa-ʹañ s̤ajjaajaa,
கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கிறோம்.
-
78:15
لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا
Linukhrija bihee ḥabbañw wanabaataa,
அதைக் கொண்டு தானியங்களையும் புற்பூண்டுகளையும் முளைப்பிக்கிறோம்.
-
78:16
وَجَنَّـٰتٍ أَلْفَافًا
Wa-Jannaatin ʹalfaafaa?
இன்னும், கிளைகள் அடர்ந்த சோலைகளையும் (உற்பத்தி செய்கிறோம்).
-
78:17
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَـٰتًا
ʹInna Yawmal Faṣli kaana meeq̣aataa,―
நிச்சயமாக (இவர்கள் தர்க்கித்து நிராகரித்துக் கொண்டிருக்கும்) அந்தத் தீர்ப்பு நாள்தான் (விசாரணைக்குக்) குறிப்பிட்ட காலமாகும்.
-
78:18
يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
Yawma yuñ-fakhu fiṣ Ṣoori fataʹtoona ʹafwaajaa;
(அதற்காக) ஸூர் (என்னும் எக்காளம்) ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்.
-
78:19
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا
Wa-futiḥa-tis samaaaʹu fakaanat ʹabwaabaa,
வானம் திறக்கப்பட்டு (அதில்) பல வழிகள் ஏற்பட்டு விடும்.
-
78:20
وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
Wa-suyyi-ratil jibaalu fakaanat saraabaa.
மலைகள் (தம் இடத்திலிருந்து) பெயர்க்கப்பட்டு தூள்தூளாகி (பறந்து) விடும்.
-
78:21
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
ʹInna Jahannama kaanat mirṣaadaa,―
நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
-
78:22
لِّلطَّـٰغِينَ مَـَٔابًا
Liṭ-ṭaag̣eena maʹaabaa:
(பாவிகளாகிய) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே.
-
78:23
لَّـٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا
Laa-bis̤eena feehaaa ʹaḥq̣aabaa.
அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள்.
-
78:24
لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
Laa- yaẓooq̣oona feehaa bar-dañw walaa- sharaabaa,
, 25. அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
-
78:25
إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
ʹIllaa ḥameemañwwa g̣assaaq̣aa,―
, 25. அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
-
78:26
جَزَآءً وِفَاقًا
Jazaaaʹañw wifaaq̣aa.
இது (அவர்கள் செயலுக்குத்) தகுமான கூலியாகும்.
-
78:27
إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا
ʹInnahum kaanoo laa- yarjoona ḥisaabaa,
ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் (மறுமையின்) கேள்வி கணக்கை நம்பவே இல்லை.
-
78:28
وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا كِذَّابًا
Wa-kaẓẓaboo biʹAayaatinaa kiẓẓaabaa.
அவர்கள் நம் வசனங்களை மிக அலட்சியமாகப் பொய்ப்பித்தார்கள்.
-
78:29
وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَـٰهُ كِتَـٰبًا
Wa-kulla shayʹin ʹaḥṣaynaahu Kitaabaa,
எனினும், இவை அனைத்தையும் நாம் (நம் குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம்.
-
78:30
فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
Faẓooq̣oo falan nazeedakum ʹil-laa ʻaẓaabaa.
ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்த மாட்டோம். ஆகவே, (இதைச்) சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறுவோம்).
-
78:31
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
ʹInna lil-Mutta-q̣eena mafaazaa;
(ஆயினும்), இறையச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சொர்க்கம் என்னும்) இடம் உண்டு.
-
78:32
حَدَآئِقَ وَأَعْنَـٰبًا
Ḥadaaaʹiq̣a wa-ʹaʻnaabaa;
(அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு.
-
78:33
وَكَوَاعِبَ أَتْرَابًا
Wa-kawaaʻiba ʹatraabaa:
(மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்,
-
78:34
وَكَأْسًا دِهَاقًا
Wa-kaʹsañ dihaaq̣aa.
(பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்).
-
78:35
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا
Laa- yasmaʻoona feehaa lag̣wañw walaa- kiẓẓaabaa;
அங்கு அவர்கள் வீண் வார்த்தையையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள்.
-
78:36
جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا
Jazaaaʹam mir Rabbika ʻaṭaaaʹan ḥisaabaa,―
(இவையெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உமது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும்.
-
78:37
رَّبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا
Rabbis samaawaati wal-ʹarḍi wa-maa baynahumar Raḥmaani laa- yam-likoona minhu khiṭaabaa.
அவனே வானங்கள், பூமி, இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் உரிமையாளனும் அளவற்ற அருளாளனும் ஆவான். எனினும், (அந்நாளில் எவருமே) அவன் முன் பேச சக்தி பெறமாட்டார்கள்.
-
78:38
يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَـٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا
Yawma yaq̣oomur Rooḥu wal-malaaaʹikatu ṣaf-faa, laa- yatakallamoona ʹil-laa man ʹaẓina lahur Raḥmaanu wa-q̣aala ṣawaabaa.
ஜிப்ரயீலும், வானவர்களும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து ‘‘சரி! பேசுவீராக!'' எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார்.
-
78:39
ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
Ẓaalikal Yawmul Ḥaq̣q̣: famañ shaaaʹat takhaẓa ʹi-laa Rabbihee maʹaabaa!
இத்தகைய நாள் (வருவது) உறுதி! ஆகவே, விரும்பியவன் தன் இறைவனிடமே தங்கும் இடத்தைத் தேடிக்கொள்ளவும்.
-
78:40
إِنَّآ أَنذَرْنَـٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَـٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا
ʹInnaaa ʹañẓarnaakum ʻAẓaabañ q̣areebaa,― Yawma yañ-z̤̣urul marʹu maa- q̣addamat yadaahu wa-yaq̣oolul kaafiru yaa-laytanee kuñtu turaabaa!
சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கிறோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் கரங்கள் செய்த செயலின் பலனை(த் தன் கண்ணால்) கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ தான் மண்ணாக ஆகவேண்டுமே என்று புலம்புவான்!
Surah An-Nazi'atBegins here at 79:1
-
79:1
وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًا
Wan-NAAZIʻAATI g̣arq̣aa;
(பாவிகளின் உயிர்களைப்) பலமாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!
-
79:2
وَٱلنَّـٰشِطَـٰتِ نَشْطًا
Wan-naa-shi-ṭaati nashṭaa;
(நல்லவர்களின் ஆத்மாவை) எளிதாகக் கைப்பற்றுபவர்கள் மீது சத்தியமாக!
-
79:3
وَٱلسَّـٰبِحَـٰتِ سَبْحًا
Wassaabiḥaati sabḥaa,―
(ஆகாயத்திலும், கடலிலும்) அதிவேகமாக(ப் பறந்து) நீந்திச் செல்லும் வானவர்கள் மீது சத்தியமாக!
-
79:4
فَٱلسَّـٰبِقَـٰتِ سَبْقًا
Fassaabiq̣aati sabq̣aa,
(இறைவனின் கட்டளையை நிறைவேற்ற) போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்பவர்கள் மீதும் சத்தியமாக!
-
79:5
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا
Fal-mudabbiraati ʹamraa.
எல்லாக் காரியங்களையும் (இறைவனின் கட்டளைப்படி) நிர்வகிக்கின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக!
-
79:6
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ
Yawma tarjufur raajifah,
(கொடிய பூகம்பத்தால் பூமி) பலமாக அதிர்ச்சியுறும் நாளில்,
-
79:7
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ
Tatbaʻuhar Raadifah:
(மேலும்) அதைத் தொடர்ந்து (பல பூகம்ப அதிர்ச்சிகள்) வரும் (நாளில் உலகம் முடிவுற்றே தீரும்).
-
79:8
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
Q̣uloobuñy Yaw-maʹiẓiñw waajifah,
அந்நாளில், உள்ளங்களெல்லாம் திடுக்கிட்டு நடுங்கிக் கொண்டிருக்கும்.
-
79:9
أَبْصَـٰرُهَا خَـٰشِعَةٌ
ʹAbṣaaruhaa khaashiʻah.
பார்வைகளெல்லாம் (பயத்தால்) கீழ்நோக்கி நிற்கும்.
-
79:10
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ
Yaq̣ooloona ʹa-ʹinnaa lamardoodoona fil ḥaafirah?―
(இவ்வாறிருக்க, நிராகரிப்பவர்கள் இதை மறுத்து) ‘‘நாம் (இறந்த பின்னர்) மெய்யாகவே நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?''
-
79:11
أَءِذَا كُنَّا عِظَـٰمًا نَّخِرَةً
ʹAʹiẓaa kunnaa ʻiz̤̣aaman nakhirah?
(அதுவும்) நாம் உக்கி எலும்பாகப் போனதன் பின்னரா (உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம்?) என்று கூறுகின்றனர்.
-
79:12
قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
Q̣aaloo tilka ʹiẓañ karratun khaasirah!
‘‘அவ்வாறாயின், அது பெரும் நஷ்டமான மீட்சிதான் என்றும் அவர்கள் (பரிகாசமாகக்)'' கூறுகின்றனர்.
-
79:13
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ
Faʹinnamaa hiya zajratuñw Waaḥidah,
(இது அவர்களுக்கு அசாத்தியமாகத் தோன்றலாம்; எனினும், நமக்கோ) அது ஓர் அதட்டல் (ஒரு உறுத்தல், ஒரு சப்தம்)தான்.
-
79:14
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
Faʹiẓaa hum̃ bissaahirah.
உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்றெழுந்து) வந்து ஒரு திடலில் கூடிவிடுவார்கள்.
-
79:15
هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Hal ʹataaka ḥadees̤u Moosaa?
(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு எட்டியதா?
-
79:16
إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى
ʹIẓ naadaahu Rabbuhoo bil-waadil muq̣addasi Ṭuwaa:
‘துவா' என்னும் பரிசுத்தமான ஓடைக்கு அவருடைய இறைவன் அவரை அழைத்ததை நினைவு கூறுங்கள்.
-
79:17
ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ
ʹIẓhab ʹilaa Firʻawna ʹinnahoo ṭag̣aa;
‘‘ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.
-
79:18
فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
Faq̣ul hal laka ʹilaaa ʹañ tazakkaa?―
(அவனிடம்) கூறுவீராக! ‘‘(பாவங்களை விட்டும்) நீ பரிசுத்தவானாக ஆக உனக்கு விருப்பம் தானா?
-
79:19
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
Wa-ʹahdiyaka ʹilaa Rabbika fatakhshaa?
(அவ்வாறாயின்) உன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய வழியை நான் உனக்கு அறிவிக்கிறேன். அவனுக்கு நீ பயந்துகொள்'' (இவ்வாறு, மூஸாவுக்கு இறைவன் கட்டளையிட்டான்).
-
79:20
فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ
Faʹaraahul ʹAayatal Kubraa.
(மூஸா அவனிடம் சென்று அவ்வாறு கூறிப்) பெரியதொரு அத்தாட்சியையும் அவனுக்குக் காண்பித்தார்.
-
79:21
فَكَذَّبَ وَعَصَىٰ
Fakaẓẓaba wa-ʻaṣaa:
(எனினும்) அவனோ, அதைப் பொய்யாக்கி (அவர் கூறியதற்கு) மாறு செய்தான்.
-
79:22
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
S̤umma ʹadbara yasʻaa,
பின்னர் (அவரை விட்டும்) விலகி (அவருக்குத் தீங்கிழைக்கவும்) முயற்சி செய்தான்.
-
79:23
فَحَشَرَ فَنَادَىٰ
Faḥashara fanaadaa,
இதற்காக(த் தன் மக்களை) ஒன்று கூட்டி (அவர்களுக்கு) அறிக்கையிட்டான்.
-
79:24
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ
Faq̣aala ʹana Rabbukumul ʹaʻlaa.
(அவர்களை நோக்கி) ‘‘நான்தான் உங்கள் மேலான இறைவன்'' என்று கூறினான்.
-
79:25
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ
Faʹakhaẓahul laahu nakaalal ʹAakhirati wal-ʹoolaa.
ஆதலால், அல்லாஹ் அவனை இம்மை மறுமையின் வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டான்.
-
79:26
إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ
ʹInna fee ẓaalika laʻibratal limañy yakhshaa.
பயப்படுபவர்களுக்கு மெய்யாகவே இதில் ஒரு நல்ல படிப்பினை இருக்கிறது.
-
79:27
ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا
ʹA-ʹañtum ʹa-shaddu khalq̣an ʹamis samaaaʹ? Banaahaa:
(மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அவ்வானத்தைப் படைத்தான்.
-
79:28
رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا
Rafaʻa sam-kahaa fasawwaahaa.
அவனே அதன் முகட்டை உயர்த்தி, அதை ஒழுங்குபடுத்தினான்.
-
79:29
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا
Wa-ʹag̣ṭasha laylahaa wa-ʹakhraja ḍuḥaahaa.
அவனே, அதன் இரவை இருளாக்கி(ச் சூரியனைக் கொண்டு) அதன் பகலை வெளியாக்கி (வெளிச்சமாக்கி)னான்.
-
79:30
وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
Wal-ʹarḍa baʻda ẓaalika daḥaahaa;
இதற்குப் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
-
79:31
أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا
ʹAkhraja minhaa maaa-ʹahaa wa-marʻaahaa;
அவனே அதிலிருந்து நீரையும், மேய்ச்சல் பொருள்களையும் வெளியாக்குகிறான்.
-
79:32
وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا
Wal-jibaala ʹarsaahaa;
மலைகளையும் அவனே (அதில்) உறுதியாக ஊன்றினான்.
-
79:33
مَتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ
Mataaʻal lakum wa-liʹanʻaamikum.
உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கக்கூடியவையாக (அவற்றை அதில் அமைத்தான்).
-
79:34
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ
Faʹiẓaa jaaaʹatiṭ ṭaaammatul Kubraa,―
(மறுமையின்) பெரும் அமளி வந்தால்,
-
79:35
يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ مَا سَعَىٰ
Yawma yataẓakkarul ʹiñsaanu maa- saʻaa,
மனிதன் செய்ததெல்லாம் அந்நாளில் அவனுடைய ஞாபகத்திற்கு வந்துவிடும்.
-
79:36
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ
Wa-burrizatil Jaḥeemu limañy yaraa.
மனிதர்கள் கண் முன் நரகம் கொண்டு வந்து வைக்கப்பட்டு விடும்.
-
79:37
فَأَمَّا مَن طَغَىٰ
Faʹammaa mañ ṭag̣aa,
எவன் வரம்பு மீறினானோ,
-
79:38
وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
Wa-ʹaas̤aral ḥayaatad dunyaa,
(மறுமையைப் புறக்கணித்து) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொண்டானோ,
-
79:39
فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ
Faʹinnal Jaḥeema hiyal maʹwaa.
அவன் செல்லும் இடம் நிச்சயமாக நரகம்தான்.
-
79:40
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ
Wa-ʹammaa man khaafa Maq̣aama Rabbihee wa-nahan nafsa ʻanil hawaa,
எவன் தன் இறைவனின் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத்தடுத்துக் கொண்டானோ,
-
79:41
فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ
Faʹinnal Jannata hiyal maʹwaa.
அவன் செல்லுமிடம் நிச்சயமாக சொர்க்கம்தான்.
-
79:42
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا
Yasʹaloonaka ʻanis Saaʻati ʹayyaana mursaahaa?
(நபியே!) மறுமையைப் பற்றி, அது எப்பொழுது வருமென உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.
-
79:43
فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ
Feema ʹañta miñ ẓikraahaa?
(எப்பொழுது வருமென்று) எதற்காக நீர் கூற வேண்டும்?
-
79:44
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
ʹIlaa Rabbika Muñtahaahaa.
அதன் முடிவெல்லாம், உமது இறைவனிடமே இருக்கிறது.
-
79:45
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا
ʹInnamaaa ʹañta muñẓiru mañy yakhshaahaa.
அந்நாளைப் பற்றிப் பயப்படக்கூடியவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை. (அது வரும் காலத்தையும், நேரத்தையும் அறிவிப்பது உமது கடமையல்ல.)
-
79:46
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا
Kaʹannahum Yawma yarawnahaa lam yalbas̤ooo ʹillaa ʻashiyyatan ʹaw ḍuḥaahaa!
அதை அவர்கள் கண்ணால் காணும் நாளில், மாலையிலோ அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமே தவிர (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்றே அவர்களுக்குத் தோன்றும்.
Surah 'AbasaBegins here at 80:1
-
80:1
عَبَسَ وَتَوَلَّىٰٓ
ʻABASA wa-tawallaa,
(நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)
-
80:2
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ
ʹAñ jaaa-ʹahul ʹaʻmaa.
தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.
-
80:3
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
Wa-maa yudreeka laʻallahoo yaz-zakkaa?―
(நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா?
-
80:4
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ
ʹAw yaẓ-ẓak-karu fatañfaʻahuẓ Ẓikraa?
அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்?)
-
80:5
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ
ʹAmmaa manis tag̣naa,
(நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ,
-
80:6
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
Faʹañta lahoo taṣaddaa;
அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.
-
80:7
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
Wa-maa ʻalayka ʹallaa yaz-zakkaa.
அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)!
-
80:8
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ
Wa-ʹammaa mañ jaaa-ʹaka yasʻaa,
எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ,
-
80:9
وَهُوَ يَخْشَىٰ
Wa-huwa yakhshaa,
அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்.
-
80:10
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
Faʹañta ʻanhu talahhaa.
எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்.
-
80:11
كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ
Kallaaa ʹinnahaa Taẓkirah:
அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்.
-
80:12
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Famañ shaaʹa ẓakarah.
எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.
-
80:13
فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ
Fee ṣuḥufim mukarramah,
இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது);
-
80:14
مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ
Marfooʻatim muṭahharah,
உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; (அது) மிகப் பரிசுத்தமானது.
-
80:15
بِأَيْدِى سَفَرَةٍ
Biʹaydee safarah―
எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது).
-
80:16
كِرَامٍۭ بَرَرَةٍ
Kiraamim bararah.
(அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்.
-
80:17
قُتِلَ ٱلْإِنسَـٰنُ مَآ أَكْفَرَهُۥ
Q̣utilal ʹiñsaanu maaa ʹakfarah?
(பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
-
80:18
مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ
Min ʹayyi shayʹin khalaq̣ah?
எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)?
-
80:19
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
Min nuṭfah: khalaq̣ahoo faq̣addarah;
ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்.
-
80:20
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
S̤ummas sabeela yas-sarah;
பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்.
-
80:21
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ
S̤umma ʹamaatahoo faʹaq̣barah;
பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான்.
-
80:22
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
S̤umma ʹiẓaa shaaaʹa ʹañsharah.
பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான்.
-
80:23
كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ
Kallaa lammaa yaq̣ḍi maaa ʹamarah.
எனினும், நிச்சயமாக மனிதன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை.
-
80:24
فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
Falyañz̤̣uril ʹiñsaanu ʹilaa Ṭaʻaamih:
மனிதன் தன் உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்.
-
80:25
أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا
ʹAnnaa ṣabab nalmaaaʹa ṣabbaa,
நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்தோம்,
-
80:26
ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا
S̤umma sha-q̣aq̣nal ʹarḍa shaq̣q̣aa;
பின்னர், பூமியையும் பிளந்(து வெடிக்கச் செய்)தோம்.
-
80:27
فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا
Faʹambatnaa feehaa Ḥabbaa,
பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கிறோம்.
-
80:28
وَعِنَبًا وَقَضْبًا
Wa-ʻinabañw Waq̣aḍbaa,
(இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்,
-
80:29
وَزَيْتُونًا وَنَخْلًا
Wa-zaytoonañw Wanakhlaa,
ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்,
-
80:30
وَحَدَآئِقَ غُلْبًا
Wa-ḥadaaaʹiq̣a g̣ulbaa,
கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்,
-
80:31
وَفَـٰكِهَةً وَأَبًّا
Wa-faaki-hatañw Waʹabbaa,
கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்,
-
80:32
مَّتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ
Mataaʻal lakum wa-liʹanʻaamikum.
உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு (முளைக்க வைக்கிறோம்).
-
80:33
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
Faʹiẓaa jaaa-ʹatiṣ Ṣaaakhkhah,―
(உலக முடிவின்பொழுது செவிகளை) செவிடாக்கும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்,
-
80:34
يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ
Yawma yafirrul mar-ʹu min ʹakheeh,
அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்,
-
80:35
وَأُمِّهِۦ وَأَبِيهِ
Wa-ʹummihee wa-ʹabeeh,
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்,
-
80:36
وَصَـٰحِبَتِهِۦ وَبَنِيهِ
Wa-ṣaaḥi-batihee wa-baneeh.
தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்).
-
80:37
لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
Likul lim-riʹim minhum Yawmaʹiẓiñ shaʹnuñy yug̣neeh.
அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.
-
80:38
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ
Wujoohuñy Yawmaʹiẓim musfirah,
எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும்,
-
80:39
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ
Ḍaaḥikatum mustabshirah.
சந்தோஷத்தால் சிரித்தவையாகவும் இருக்கும்.
-
80:40
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ
Wa-wujoohuñy Yawmaʹiẓin ʻalayhaa g̣abarah;
அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.
-
80:41
تَرْهَقُهَا قَتَرَةٌ
Tarhaq̣uhaa q̣atarah:
கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).
-
80:42
أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ
ʹUlaaaʹika humul kafaratul Fajarah.
இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.
Surah At-TakwirBegins here at 81:1
-
81:1
إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ
ʹIẓash shamsu kuwwirat;
(உலக முடிவுக்காகச்) சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும்போது,
-
81:2
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ
Wa-ʹiẓan nujoomuñ kadarat;
நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது,
-
81:3
وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ
Wa-ʹiẓal jibaalu suyyirat;
மலைகள் அதனிடங்களில் இருந்து அகற்றப்படும் போது,
-
81:4
وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ
Wa-ʹiẓal ʻishaaru ʻuṭṭilat;
(இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கவனிப்பின்றி) விடப்படும்போது.
-
81:5
وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ
Wa-ʹiẓal wuḥooshu ḥushirat;
காட்டு மிருகங்கள் (பயந்து ஊர்களில் வந்து) ஒன்றுகூடும்போது.
-
81:6
وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ
Wa-ʹiẓal biḥaaru sujjirat;
கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்.)
-
81:7
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ
Wa-ʹiẓan nufoosu zuwwijat:
அப்போது உயிர்கள் உடலுடன் (மீண்டும்) சேர்க்கப்படும்.
-
81:8
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ
Wa-ʹiẓal mawʹoodatu suʹilat―
அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும்,
-
81:9
بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ
Biʹayyi ẓambiñ q̣utilat;
‘‘எந்த குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?'' என்று.
-
81:10
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ
Wa-ʹiẓaṣ ṣuḥufu nushirat:
அப்போது (விசாரணைக்காக மனிதர்களுடைய) ஏடுகள் விரிக்கப்படும்.
-
81:11
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ
Wa-ʹiẓas samaaaʹu kushiṭat;
அப்போது வானம் (பிளந்து) அகற்றப்பட்டுவிடும்.
-
81:12
وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ
Wa-ʹiẓal Jaḥeemu suʻ-ʻirat;
அப்போது நரகம் எரிக்கப்படும்.
-
81:13
وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ
Wa-ʹiẓal Jannatu ʹuzlifat;
அப்போது சொர்க்கம் சமீபமாகக் கொண்டு வரப்படும்.
-
81:14
عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ
ʻAlimat nafsum maaa ʹaḥḍarat.
(அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் (நன்மையோ தீமையோ) தான் செய்து கொண்டு வந்திருப்பதை நன்கறிந்து கொள்ளும்.
-
81:15
فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ
Falaaa ʹuq̣simu bil-khunnas,
(மனிதர்களே!) சென்றவழியே மேலும் செல்லும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!
-
81:16
ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ
ʹAl-jawaaril kunnas;
தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!
-
81:17
وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ
Wal-Layli ʹiẓaa ʻasʻas;
செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக!
-
81:18
وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ
Waṣṣubḥi ʹiẓaa tanaffas;―
உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக!
-
81:19
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
ʹInnahoo laq̣awlu Rasooliñ Kareem,
நிச்சயமாக (திரு குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரயீல் என்னும்) ஒரு (வானவத்) தூதர் மூலம் கூறப்பட்டதாகும்.
-
81:20
ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ
Ẓee q̣uwwatin ʻiñda Ẓil ʻArshi makeen,
அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு.
-
81:21
مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ
Muṭaaʻiñ s̤amma ʹAmeen.
(அவர் அவ்விடத்திலுள்ள வானவர்களின்) தலைவர்; மிக்க நம்பிக்கையுடையவர்.
-
81:22
وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ
Wa-maa Ṣaaḥibukum̃ bimajnoon;
(மக்காவாசிகளே! நம் தூதராகிய) உங்கள் தோழர் பைத்தியக்காரரல்ல.
-
81:23
وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ
Wa-laq̣ad raʹaahu bilʹufuq̣il mubeen.
நிச்சயமாக அவர் (ஜிப்ரயீலை) தெளிவான வானத்தின் கோடியில் மெய்யாகவே கண்டார்.
-
81:24
وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ
Wa-maa huwa ʻalal g̣aybi biḍaneen.
(அச்சமயம் அவர் கண்ட) மறைவானவற்றை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரல்ல.
-
81:25
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَـٰنٍ رَّجِيمٍ
Wa-maa huwa biq̣awli Shayṭaanir rajeem.
இன்னும், இது வெருட்டப்பட்ட ஷைத்தானின் சொல்லுமல்ல.
-
81:26
فَأَيْنَ تَذْهَبُونَ
Faʹayna taẓhaboon?
ஆகவே, (இதைவிட்டு) நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள்?
-
81:27
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَـٰلَمِينَ
ʹIn huwa ʹilla Ẓikrul lilʻaalameen:
இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.
-
81:28
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
Limañ shaaaʹa miñkum ʹañy yastaq̣eem:
உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகிறாரோ அவருக்கு (இது பயனளிக்கும்).
-
81:29
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ
Wa-maa tashaaaʹoona ʹillaaa ʹañy yashaaaʹal laahu Rabbul ʻAalameen.
எனினும், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினால் தவிர, நீங்கள் (நல்லுணர்ச்சி பெற) விரும்பமாட்டீர்கள்.
Surah Al-InfitarBegins here at 82:1
-
82:1
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ
ʹIẓas Samaaaʹuñ faṭarat;
(உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால்,
-
82:2
وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ
Wa-ʹiẓal kawaakibuñ tas̤arat;
நட்சத்திரங்கள் சிதறிவிட்டால்,
-
82:3
وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ
Wa-ʹiẓal biḥaaru fujjirat;
கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால்,
-
82:4
وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ
Wa-ʹiẓal q̣ubooru buʻs̤irat;
சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,)
-
82:5
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ
ʻAlimat nafsum maa q̣addamat wa-ʹakhkharat.
ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவற்றையும் நன்கறிந்துகொள்ளும்.
-
82:6
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ
Yaaaʹayyuhal ʹiñsaanu maa- g̣arraka bi-Rabbikal Kareem?―
மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது?
-
82:7
ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
ʹAllaẓee khalaq̣aka fasawwaaka faʻadalak;
அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னைப் படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான்.
-
82:8
فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ
Feee ʹayyi Ṣooratim maa shaaaʹa rakkabak.
அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன் அவயங்களைப் பொறுத்தினான்.
-
82:9
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
Kallaa bal tukaẓẓiboona bid-Deen!
எனினும், (மனிதர்களே!) நீங்கள் கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகிறீர்கள்.
-
82:10
وَإِنَّ عَلَيْكُمْ لَحَـٰفِظِينَ
Wa-ʹinna ʻalaykum laḥaafiz̤̣een,―
நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
-
82:11
كِرَامًا كَـٰتِبِينَ
Kiraamañ Kaatibeen:
அவர்கள் (வானவர்களில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்.
-
82:12
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
Yaʻlamoona maa- tafʻaloon.
நீங்கள் செய்பவற்றையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்.
-
82:13
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ
ʹInnal ʹabraara lafee Naʻeem;
ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள்.
-
82:14
وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍ
Wa-ʹinnal fujjaara lafee Jaḥeem.
நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்.
-
82:15
يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ
Yaṣlawnahaa Yawmad Deen.
கூலி கொடுக்கும் நாளில் அதையே அவர்கள் அடைவார்கள்.
-
82:16
وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ
Wa-maa hum ʻanhaa big̣aaaʹibeen.
அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது.
-
82:17
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ
Wa-maaa ʹadraaka maa- Yawmud Deen?
(நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீர் அறிவீரா?
-
82:18
ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ
S̤umma maaa ʹadraaka maa- Yawmud Deen?
பிறகு, கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உமக்கு எவரேனும் அறிவித்தனரா?
-
82:19
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ
Yawma laa- tamliku nafsul linafsiñ shayʹaa: walʹAmru Yawmaʹiẓil lillaah.
அந்நாளில் ஓர் ஆத்மா, மற்றோர் ஆத்மாவுக்கு ஒரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும்.
Surah Al-MutaffifinBegins here at 83:1
-
83:1
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ
Waylul lil-muṭaffifeen,―
அளவில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான்.
-
83:2
ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ
ʹAllaẓeena ʹiẓak taaloo ʻalan naasi yastawfoon,
அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர்.
-
83:3
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ
Wa-ʹiẓaa kaaloohum ʹaw Wazanoohum yukhsiroon.
மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர்.
-
83:4
أَلَا يَظُنُّ أُو۟لَـٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ
ʹAlaa yaz̤̣unnu ʹulaaaʹika ʹannahum mabʻoos̤oon
, 5. மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா?
-
83:5
لِيَوْمٍ عَظِيمٍ
Li-Yawmin ʻAz̤̣eem.
, 5. மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா?
-
83:6
يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
Yawma yaq̣oomun naasu li-Rabbil ʻAalameen?
அந்நாளில், மனிதர்கள் அனைவருமே உலகத்தாரின் இறைவன் முன் (விசாரணைக்காக) நின்று கொண்டிருப்பார்கள்.
-
83:7
كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ
Kallaaa ʹinna Kitaabal fujjaari lafee Sijjeen.
நிச்சயமாக பாவிகளின் பதிவேடு (நரகத்தின்) சிறைக்கூடத்தில் இருக்கும்.
-
83:8
وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ
Wa-maaa ʹadraaka maa- Sijjeen?
(நபியே!) அச்சிறைக்கூடத்தின் பதிவேட்டை நீர் அறிவீரா?
-
83:9
كِتَـٰبٌ مَّرْقُومٌ
Kitaabum marq̣oom.
அது ஒரு பதிவுப்புத்தகம் (தண்டிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் எல்லாம்) அதில் பதியப்பட்டிருக்கும்.
-
83:10
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
Wayluñy Yawmaʹiẓil lil-mukaẓẓibeen―
(இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
-
83:11
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ
ʹAllaẓeena yukaẓẓiboona bi-Yawmid Deen.
அவர்கள் (இதை மட்டுமா பொய்யாக்குகின்றனர்?) கூலி கொடுக்கும் நாளையும் பொய்யாக்குகின்றனர்.
-
83:12
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ
Wa-maa yukaẓẓibu biheee ʹillaa kullu muʻtadin ʹas̤eem!
வரம்புமீறிய பாவியைத் தவிர (மற்றெவரும்) அதைப் பொய்யாக்க மாட்டான்.
-
83:13
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَـٰتُنَا قَالَ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ
ʹIẓaa tutlaa ʻalayhi ʹAayaatunaa q̣aala ʹAsaaṭeerul ʹAwwaleen!
அவனுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகள் தான் என்று கூறுகிறான்.
-
83:14
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
Kallaa bal; raana ʻalaa q̣uloobihim maa kaanoo yaksiboon!
நிச்சயமாக அவ்வாறல்ல. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களே அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப்படிந்து) மூடிக் கொண்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்.)
-
83:15
كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ
Kallaaa ʹinnahum ʻar Rabbihim Yawmaʹiẓil lamaḥjooboon.
அவ்வாறல்ல. (விசாரணைக்காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில் நிச்சயமாக இவர்கள் தங்கள் இறைவனை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்.
-
83:16
ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ
S̤umma ʹinnahum laṣaalul Jaḥeem.
பின்னர், நிச்சயமாக இவர்கள் நரகத்தில் நுழைவார்கள்.
-
83:17
ثُمَّ يُقَالُ هَـٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
S̤umma yuq̣aalu haaẓal laẓee kuñtum̃ bihee tukaẓẓiboon!
பின்னர், (இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தது இதுதான்'' என்று கூறப்படும்.
-
83:18
كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ
Kallaaa ʹinna Kitaabal ʹAbraari lafee ʻIlliyyeen.
அவ்வாறல்ல! நிச்சயமாக நன்மை செய்தவர்களின் பதிவேடு ‘‘இல்லிய்யூன்' என்ற (மேலான) இடத்தில் இருக்கும்.
-
83:19
وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ
Wa-maaa ʹadraaka maa- ʻIlliyyoon?
(நபியே!) ‘இல்லிய்யூன்' என்னும் (மேலான) இடத்தில் இருக்கும் பதிவேடு என்னவென்று நீர் அறிவீரா?
-
83:20
كِتَـٰبٌ مَّرْقُومٌ
Kitaabum marq̣oom,
அது ஒரு பதிவுப் புத்தகம். அதில் (நல்லவர்களின் பெயர்களெல்லாம்) பதியப்பட்டிருக்கும்.
-
83:21
يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ
Yashhaduhul Muq̣arraboon.
‘முகர்ரப்' (இறைநெருக்கத்திற்குரிய) வானவர்கள் அதை(க் காத்து)ப் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
-
83:22
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ
ʹInnal ʹAbraara lafee Naʻeem:
ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள் (அந்நாளில்) இன்பம் நிறைந்த சொர்க்கத்தில்,
-
83:23
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
ʻAlal ʹaraaaʹiki yañz̤̣uroon:
உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்த வண்ணம் சொர்க்கத்தின் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
-
83:24
تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ
Taʻrifu fee wujoohihim naḍratan Naʻeem.
அவர்கள் முகங்களில் அவர்களின் சுகவாசத்தின் செழிப்பை (நபியே!) நீர் அறிந்து கொள்வீர்.
-
83:25
يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ
Yusq̣awna mir raḥeeq̣im makhtoom:
முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற திராட்சை ரசம் அவர்களுக்குப் புகட்டப்படும்.
-
83:26
خِتَـٰمُهُۥ مِسْكٌ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَـٰفِسُونَ
Khitaamuhoo misk: wa-fee ẓaalika falyatanaafasil mutanaafisoon:
அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். (பானத்தை) ஆசை கொள்ள விரும்புவோர் அதையே ஆசை கொள்ளவும்.
-
83:27
وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ
Wa-mizaajuhoo miñ Tasneem,
அதில் ‘தஸ்னீம்' என்ற (வடிகட்டிய) பானமும் கலந்திருக்கும்.
-
83:28
عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ
ʻAynañy yashrabu bihal Muq̣arraboon.
(தஸ்னீம் என்பது அல்லாஹ்வுக்குச்) சமீபமானவர்கள் அருந்துவதற்கென ஏற்பட்ட ஒரு (சிறப்பான) சுனையின் நீராகும்.
-
83:29
إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ
ʹInnal laẓeena ʹajramoo kaanoo minal laẓeena ʹaamanoo yaḍḥakoon,
நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கை கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர்.
-
83:30
وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ
Wa-ʹiẓaa marroo bihim yatag̣aamazoon;
அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக்கொள்கின்றனர்.
-
83:31
وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ
Wa-ʹiẓañ q̣alabooo ʹilaaa ʹahlihimuñ q̣alaboo fakiheen;
(அவர்களை விட்டும் விலகித்) தங்கள் குடும்பத்தார்களிடம் சென்று விட்டபோதிலும், இவர்களுடைய விஷயங்களையே (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர்.
-
83:32
وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَـٰٓؤُلَآءِ لَضَآلُّونَ
Wa-ʹiẓaa raʹawhum q̣aalooo ʹinna haaaʹulaaaʹi laḍaaal-loon!
(வழியில்) இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) ‘‘நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள்'' என்றும் கூறுகின்றனர்.
-
83:33
وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَـٰفِظِينَ
Wa-maaa ʹursiloo ʹalayhim Ḥaafiz̤̣een.
(நம்பிக்கையாளர்களைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே!
-
83:34
فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ
Fal-Yawmal laẓeena ʹaamanoo minal kuffaari yuḍḥakoon:
எனினும், (மறுமை நாளாகிய) இன்றைய தினம் நம்பிக்கை கொண்டவர்கள் அந்நிராகரிப்பவர்களைக் கண்டு சிரிக்கின்றனர்.
-
83:35
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
ʻAlal ʹaraaaʹiki yañz̤̣uroon.
(சொர்க்கத்திலுள்ள சிறந்த) இருக்கைகள் மீது (சாய்ந்த வண்ணம்) இருந்து கொண்டு, இந்தப் பாவிகள் படும் வேதனையைப்) பார்த்துக்கொண்டு,
-
83:36
هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ
Hal s̤uwwibal kuffaaru maa- kaanoo yafʻaloon?
(மறுமையை) நிராகரித்த இவர்களுக்கு, இவர்களுடைய செயலுக்குத்தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்பார்கள்.)
Surah Al-InshiqaqBegins here at 84:1
-
84:1
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ
ʹIẓas Samaaaʹuñ shaq̣q̣at,
(உலகம் அழியும் சமயத்தில்) வானம் பிளந்து விடும்போது,
-
84:2
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
Wa-ʹaẓinat li-Rabbihaa wa-ḥuq̣q̣at;
அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும் போது. (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
-
84:3
وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ
Wa-ʹiẓal ʹarḍu muddat,
மேலும், பூமி விரிக்கப்படும்போது,
-
84:4
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
Waʹalq̣at maa- feehaa wa-takhallat,
மேலும், அது தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எறிந்து வெறுமனே ஆகிவிடும்போது,
-
84:5
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
Wa-ʹaẓinat li-Rabbihaa wa-ḥuq̣q̣at.
மேலும், அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்து விடும் (போது மனிதன் தன் செயலுக்குரிய கூலியைப் பெறுவான்). (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
-
84:6
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَـٰقِيهِ
Yaaaʹayyuhal ʹiñsaanu ʹinnaka kaadiḥun ʹilaa Rabbika kad-ḥañ famulaaq̣eeh.
மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரை (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) சிரமத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கிறாய். (பின்னர், மறுமையில்) அவனை நீ சந்திக்கிறாய்.
-
84:7
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ
Faʹammaa man ʹootiya Kitaabahoo biyameenih.
ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய செயலேடு கொடுக்கப்படுகிறதோ,
-
84:8
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
Fasawfa yuḥaasabu ḥisaabañy yaseeraa,
அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்.
-
84:9
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا
Wa-yañq̣alibu ʹilaaa ʹahlihee masrooraa.
அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார்.
-
84:10
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ
Wa-ʹammaa man ʹootiya Kitaabahoo wa-raaaʹa z̤̣ahrih,
எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ,
-
84:11
فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا
Fasawfa yadʻoo s̤ubooraa,
அவன், (தனக்குக்) கேடுதான் என்று (அப்படியே) சப்தமிடுவான்,
-
84:12
وَيَصْلَىٰ سَعِيرًا
Wa-yaṣlaa Saʻeeraa.
நரகத்தில் நுழைவான்.
-
84:13
إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا
ʹInnahoo kaana feee ahlihee masrooraa.
ஏனென்றால், நிச்சயமாக அவன் (இம்மையிலிருந்த காலமெல்லாம் மறுமையை மறந்து) தன் குடும்பத்தார்களுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தான்.
-
84:14
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
ʹInnahoo z̤̣anna ʹal lañy yaḥoor!
மெய்யாகவே அவன் (தன் இறைவனிடம்) மீளவே மாட்டோம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தான்.
-
84:15
بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا
Balaaa ʹinna Rabbahoo kaana bihee Baṣeeraa!
அது சரியன்று! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாகவே இருந்தான்.
-
84:16
فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ
Falaaa ʹuq̣simu bish-Shafaq̣;
(மாலை நேர) செம்மேகத்தின் மீது சத்தியமாக!
-
84:17
وَٱلَّيْلِ وَمَا وَسَقَ
Wallayli wa-maa wa-saq̣;
இரவின் மீதும், அது மறைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியமாக!)
-
84:18
وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ
Wal-Q̣amari ʹiẓat tasaq̣;
பூரணச் சந்திரன் மீது சத்தியமாக!
-
84:19
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
Latarkabunna ṭabaq̣an ʻañ ṭabaq̣.
(ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதிருக்கிறது.
-
84:20
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
Famaa lahum laa- yuʹminoon,
ஆகவே, (இதை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இதை நம்பிக்கை கொள்வதில்லை.
-
84:21
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩
Wa-ʹiẓaa q̣uriʹa ʻalayhimul Q̣urʹaanu laa- yasjudoon?
அவர்களுக்கு இந்த குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட போதிலும், (இறைவனை) அவர்கள் சிரம் பணிந்து வணங்குவது இல்லை.
-
84:22
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ
Balil laẓeena kafaroo yukaẓẓiboon.
அது மட்டுமா? இந்நிராகரிப்பவர்கள் (இந்த குர்ஆனையே) பொய்யாக்குகின்றனர்.
-
84:23
وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
Wallaahu ʹAʻlamu bimaa yooʻoon.
எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான்.
-
84:24
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
Fabashshirhum̃ biʻAẓaabin ʹaleem,
ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.
-
84:25
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ
ʹIllal laẓeena ʹaamanoo wa-ʻamiluṣ ṣaaliḥaati lahum ʹAjrun g̣ayru mamnoon.
எனினும், இவர்களில் எவர்கள் (தங்கள் பாவத்திலிருந்து திருந்தி) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு.
Surah Al-BurujBegins here at 85:1
-
85:1
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ
Was-Samaaaʹi ẓaatil BUROOJ;
கோள்கள் நிறைந்த வானத்தின் மீது சத்தியமாக,
-
85:2
وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ
Wal-Yawmil Mawʻood;
வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாள் மீது சத்தியமாக,
-
85:3
وَشَاهِدٍ وَمَشْهُودٍ
Wa-Shaahidiñw Wa-Mashhood;
சாட்சியின் மீதும், சாட்சி சொல்ல வேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!
-
85:4
قُتِلَ أَصْحَـٰبُ ٱلْأُخْدُودِ
Q̣utila ʹaṣḥaabul ʹukhdood,―
அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.)
-
85:5
ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ
ʹAnnaari ẓaatil Waq̣ood:
அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்).
-
85:6
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ
ʹIẓ hum ʻalayhaa q̣uʻood,
அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில்,
-
85:7
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌ
Wa-hum ʻalaa maa- yafʻaloona bilmuʹmineena shuhood.
நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள்.
-
85:8
وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ
Wa-maa naq̣amoo minhum ʹillaaa ʹañy yuʹminoo billaahil ʻAzeezil Ḥameed,―
(நம்பிக்கை கொண்ட) அவர்களில் ஒரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர்.
-
85:9
ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ
ʹAllaẓee lahoo mulkus samaawaati wal-ʹarḍ: Wallaahu ʻalaa kulli shayʹiñ Shaheed.
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (அவனை நம்பிக்கை கொண்டதற்காகவே அந்த பாவிகள் அவர்களை நெருப்பில் எறிந்தனர்.) அல்லாஹ்வோ, (இவர்கள் செய்த) அனைத்திற்கும் சாட்சி ஆவான்.
-
85:10
إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ
ʹInnal laẓeena fatanul Muʹmineena wal-muʹminaati s̤umma lam yatooboo falahum ʻaẓaabu Jahannama wa-lahum ʻAẓaabul ḥareeq̣.
ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்தி பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. மேலும், (அவர்கள் நம்பிக்கையாளர்களை நெருப்பிட்டவாறு) அவர்களுக்கும் பொசுக்குகின்ற வேதனையுண்டு.
-
85:11
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ جَنَّـٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ
ʹInnal laẓeena ʹaamanoo wa-ʻamiluṣ ṣaaliḥaati lahum Jannaatuñ tajree miñ taḥtihal ʹanhaar: ẓaalikal Fawzul kabeer.
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ நிச்சயமாக அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களுண்டு. இதுதான் மாபெரும் வெற்றி.
-
85:12
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
ʹInna Baṭsha Rabbika lashadeed.
(நபியே! இந்த விஷமிகளைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்) நிச்சயமாக உமது இறைவனின் பிடி மிக்க கடுமையானது. (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.)
-
85:13
إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ
ʹInna-Hoo Huwa yubdiʹu wa-yuʻeed.
நிச்சயமாக அவன்தான் (அவர்களை) உற்பத்தி செய்கிறான். (அவர்கள் மரணித்த பின்னரும்) அவர்களை மீளவைப்பான்.
-
85:14
وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ
Wa-Huwal G̣afoorul Wadood,
அவன்தான் (நம்பிக்கை கொண்டவர்களை) மிக்க மன்னிப்பவனும், மிக நேசிப்பவனும் ஆவான்.
-
85:15
ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ
Ẓul ʻArshil Majeed.
(அவன்தான்) அர்ஷுடையவன், மகா கீர்த்தியுடையவன்.
-
85:16
فَعَّالٌ لِّمَا يُرِيدُ
Faʻ-ʻaalul limaa yureed.
தான் விரும்பியதையெல்லாம் செய்யக் கூடியவன்.
-
85:17
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ
Hal ʹataaka ḥadees̤ul Junood―
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு எட்டியதா? (யாருடைய படைகள்?)
-
85:18
فِرْعَوْنَ وَثَمُودَ
Firʻawna wa-S̤amood?
ஃபிர்அவ்ன், ஸமூதுடைய (படைகள்).
-
85:19
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍ
Balil laẓeena kafaroo fee takẓeeb!
எனினும், இந்நிராகரிப்பவர்கள் (குர்ஆனைப்) பொய்யாக்குவதிலேயே (முனைந்து) கிடக்கின்றனர்.
-
85:20
وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ
Wallaahu miñw waraaaʹihim Muḥeeṭ!
அல்லாஹ்வோ, அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறான்.
-
85:21
بَلْ هُوَ قُرْءَانٌ مَّجِيدٌ
Bal Huwa Q̣urʹaanum Majeed,
(இது கவியல்ல.) மாறாக, இது கீர்த்திமிக்க குர்ஆன்,
-
85:22
فِى لَوْحٍ مَّحْفُوظٍۭ
Fee Lawḥim Maḥfooz̤̣!
(இது) லவ்ஹுல் மஹ்பூளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அதை இவர்கள் நிராகரிப்பதனால் ஆகக்கூடியதென்ன?)
Surah At-TariqBegins here at 86:1
-
86:1
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
Was-Samaaaʹi waṭ-ṬAARIQ̣;
வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக!
-
86:2
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ
Wa-maaa ʹadraaka maṭ Ṭaariq̣?
(நபியே!) உதயமாகக்கூடியது என்னவென்று நீர் அறிவீரா!
-
86:3
ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ
ʹAn-Najmus̤ s̤aaq̣ib!
(இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற நட்சத்திரம்.
-
86:4
إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ
ʹIñ kullu nafsil lammaa ʻalayhaa ḥafiz̤̣.
ஒவ்வொரு மனிதனிடமும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) கண்காணிக்கக் கூடிய ஒரு (வான)வர் இல்லாமலில்லை.
-
86:5
فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ مِمَّ خُلِقَ
Fal-yañz̤̣uril ʹiñsaanu mimma khuliq̣.
ஆகவே, மனிதன், தான் எதனால் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை கவனிக்கவும்.
-
86:6
خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ
Khuliq̣a mim maaaʹiñ daafiq̣,
குதித்து வெளிப்படும் ஒரு துளித் தண்ணீரைக் கொண்டே படைக்கப்பட்டான்.
-
86:7
يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ
Yakhruju mim bayniṣ ṣulbi wat-taraaaʹib.
அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.
-
86:8
إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ
ʹInna-Hoo ʻalaa rajʻihee laq̣aadir.
(இவ்வாறு படைக்கின்ற) அவன் (மனிதன் இறந்தபின் உயிர் கொடுத்து) அவனை மீளவைக்கவும் நிச்சயமாக ஆற்றலுடையவன்ன!
-
86:9
يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ
Yawma tublas saraaaʹir,
என்றைய தினம் எல்லா மர்மங்களும் வெளிப்பட்டுவிடுமோ,
-
86:10
فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
Famaa lahoo miñ q̣uwtiñwwa walaa naaṣir.
(அன்றைய தினம்) மனிதனுக்கு ஒரு சக்தியும் இருக்காது. உதவி செய்பவனும் இருக்க மாட்டான்.
-
86:11
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ
Was-Samaaaʹi ẓaatir rajʻ.
மழை பொழியும் வானத்தின் மீது சத்தியமாக!,
-
86:12
وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ
Wal-ʹarḍi ẓaatiṣ ṣadʻ,―
(புற்பூண்டுகள் முளைக்க) வெடிக்கும் பூமியின் மீதும் சத்தியமாக!
-
86:13
إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ
ʹInnahoo laq̣awluñ faṣl:
மெய்யாகவே இது (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக்கூடிய சொல்லாகும்.
-
86:14
وَمَا هُوَ بِٱلْهَزْلِ
Wa-maa huwa bil-hazl.
இது வீண் பரிகாசமா(ன வார்த்தைய)ல்ல.
-
86:15
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا
ʹInnahum yakeedoona kaydaa,
(நபியே!) நிச்சயமாக அவர்கள் (உமக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள்.
-
86:16
وَأَكِيدُ كَيْدًا
Wa-ʹakeedu kaydaa.
நானும் (அவர்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்வேன்.
-
86:17
فَمَهِّلِ ٱلْكَـٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا
Famahhilil kaafireena ʹamhilhum ruwaydaa.
ஆகவே, இந்நிராகரிப்பவர்களுக்கு (அது வரை) நீர் அவகாசமளிப்பீராக. (அதிகமல்ல;) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளிப்பீராக.
Surah Al-A'laBegins here at 87:1
-
87:1
سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى
Sabbiḥis ma Rabbikal ʹAʻlaa,
(நபியே!) மிக மேலான உமது இறைவனின் திருப்பெயரை நீர் புகழ்ந்து துதி செய்வீராக;
-
87:2
ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ
ʹAllaẓee khalaq̣a fasawwaa;
அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, (அவற்றை) ஒழுங்குபடுத்தியவன்.
-
87:3
وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ
Wallaẓee q̣addara fahadaa;
அவனே (அவற்றுக்கு வேண்டிய சகலவற்றையும்) நிர்ணயம் செய்து, (அவற்றை அடையக் கூடிய) வழிகளையும் (அவற்றுக்கு) அறிவித்தான்.
-
87:4
وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ
Wallaẓeee ʹakhrajal marʻaa,
அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சல் பொருள்களையும் வெளிப்படுத்துகிறான்.
-
87:5
فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ
Fajaʻalahoo g̣us̤aaaʹan ʹaḥwaa.
பின்னர் அவற்றை உலர்ந்த சருகுகளாக ஆக்குகிறான்.
-
87:6
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ
Sanuq̣riʹuka falaa tañsaa,
, 7. (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்.
-
87:7
إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ
ʹIllaa maa- shaaaʹal laah: ʹinna-Hoo yaʻlamul jahra wa-maa yakhfaa.
, 7. (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்.
-
87:8
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ
Wa-nu-yassiruka lil-Yusraa,
சொர்க்கப் பாதையை நாம் உமக்கு எளிதாக்கித் தருவோம்.
-
87:9
فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ
Faẓakkir ʹin nafaʻatiẓ ẓikraa.
ஆகவே, நல்லுபதேசம் (மக்களுக்குப்) பயனளிக்கின்ற வரை நீர் உபதேசித்துக் கொண்டே வருவீராக.
-
87:10
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ
Sayaẓẓakkaru mañy yakhshaa:
நிச்சயமாக எவர் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ அவர், (இதைக் கொண்டு) நல்லறிவை அடைவார்.
-
87:11
وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى
Wa-yatajannabuhal ʹashq̣aa,
துர்ப்பாக்கியமுடையவனோ, இதிலிருந்து விலகிக்கொள்வான்.
-
87:12
ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ
ʹAllaẓee yaṣlan Naaral kubraa,
(எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை அடைவான்.
-
87:13
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
S̤umma laa- yamootu feehaa wa-laa yaḥyaa.
பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான்.
-
87:14
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
Q̣ad ʹaflaḥa mañ tazakkaa.
எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார்.
-
87:15
وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
Wa-ẓakaras ma Rabbihee faṣallaa.
அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார்.
-
87:16
بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
Bal tuʹs̤iroonal ḥayaatad dunyaa;
எனினும், நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
-
87:17
وَٱلْـَٔاخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰٓ
Wal-ʹAakhiratu khayruñw waʹabq̣aa.
மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.
-
87:18
إِنَّ هَـٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ
ʹInna haaẓaa lafiṣ Ṣuḥufil ʹoolaa,―
நிச்சயமாக இது முன்னுள்ள வேதங்களிலும்,
-
87:19
صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ
Ṣuḥufi ʹIbraaheema wa-Moosaa.
இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் இருக்கிறது.
Surah Al-GhashiyahBegins here at 88:1
-
88:1
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ
Hal ʹataaka ḥadees̤ul G̣aashiyah?
(நபியே! அனைவரையும்) சூழ்ந்து கொள்ளக்கூடிய (மறுமையைப் பற்றிய) செய்தி உமக்குக் கிடைத்ததா?
-
88:2
وُجُوهٌ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ
Wujoohuñy Yawmaʹiẓin khaashiʻah,
அந்நாளில், சில முகங்கள் இழிவடைந்து இருக்கும்.
-
88:3
عَامِلَةٌ نَّاصِبَةٌ
ʻAamilatun naaṣibah,
அவை (தவறான வழியில்) அமல் செய்து (அதிலேயே) நிலைத்திருந்தவை.
-
88:4
تَصْلَىٰ نَارًا حَامِيَةً
Taṣlaa Naaran ḥaamiyah,―
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கே அவை செல்லும்.
-
88:5
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ
Tusq̣aa min ʻaynin ʹaaniyah,
(அவை) கொதிக்கின்ற ஓர் ஊற்றிலிருந்து நீர் புகட்டப்படும்.
-
88:6
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ
Laysa lahum ṭaʻaamun ʹillaa miñ Ḍareeʻ
அதில் அவர்களுக்கு(க் கருவேல) முட்களைத் தவிர, வேறொன்றும் உணவாகக் கிடைக்காது.
-
88:7
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ
Laa- yusminu wa-laa yug̣nee miñ jooʻ.
(அது அவர்களுடைய உடலைக்) கொழுக்கவும் வைக்காது; (அவர்களுடைய) பசியையும் தீர்த்து வைக்காது.
-
88:8
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ
Wujoohuñy Yawmaʹiẓin naaʻimah,
எனினும், அந்நாளில் வேறு சில முகங்களோ, மிக்க செழிப்பாக இருக்கும்.
-
88:9
لِّسَعْيِهَا رَاضِيَةٌ
Lisaʻyihaa raaḍiyah,
(இம்மையில்) தாங்கள் செய்த (நல்ல) காரியங்களைப் பற்றித் திருப்தியடையும்.
-
88:10
فِى جَنَّةٍ عَالِيَةٍ
Fee Jannatin ʻaaliyah,
(அவை) மேலான சொர்க்கத்தில் இருக்கும்.
-
88:11
لَّا تَسْمَعُ فِيهَا لَـٰغِيَةً
Laa- tasmaʻu feehaa laag̣iyah:
அதில் வீண் வார்த்தையை அவை செவியுறாது.
-
88:12
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
Feehaa ʻaynuñ jaariyah,
அதில் (இவர்கள் அருந்துவதற்கு) தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்ற (தெளிவான) ஒரு சுனையுண்டு.
-
88:13
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ
Feehaa Sururum marfooʻah,
அதில் (இவர்கள் அமருவதற்கு) உயர்ந்த இருக்கைகளுண்டு.
-
88:14
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ
Wa-ʹakwaabum mawḍooʻah,
(பல வகை இன்பமான பானங்கள் நிறைந்த) கெண்டிகள் (இவர்கள் முன்) வைக்கப்பட்டிருக்கும்.
-
88:15
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
Wa-namaariq̣u maṣfoofah,
(இவர்கள் சாய்ந்து கொள்வதற்காகத்) திண்டு தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.
-
88:16
وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ
Wa-zaraabiyyu mabs̤oos̤ah.
உயர்ந்த விரிப்புகள் இவர்களின் கீழ் விரிக்கப்பட்டிருக்கும். (இத்தகைய சுகபோகத்தில் நல்லடியார்கள் இருப்பார்கள்.)
-
88:17
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
ʹAfalaa yañz̤̣uroona ʹilal ʹibili kayfa khuliq̣at?―
(நபியே! இந்நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது?
-
88:18
وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
Wa-ʹilas Samaaaʹi kayfa rufiʻat?―
(அவர்களுக்கு மேல் உள்ள) வானத்தையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
-
88:19
وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
Wa-ʹilal Jibaali kayfa nuṣibat?
(அவர்கள் கண்முன் தோன்றும்) மலைகளையும் அவர்கள் (கவனிக்க வேண்டாமா?) அவை எவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன?
-
88:20
وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
Wa-ʹilal ʹArḍi kayfa suṭiḥat?
(அவர்கள் வசிக்கும்) பூமியையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது?
-
88:21
فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ
Faẓakkir, ʹinnamaaa ʹañta muẓakkir.
(ஆகவே, நபியே!) இவற்றை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து, இவற்றைப் படைத்தவனின் அருள்களை, அவர்களுக்கு நீர் கூறி) நல்லுபதேசம் செய்வீராக! (இவற்றைக்கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறாவிடில் அதற்காக நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) நீர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தான்,
-
88:22
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
Lasta ʻalayhim̃ bimuṣayṭir.
(அவ்வாறே நடக்கும்படி) அவர்களை நீர் நிர்ப்பந்திக்கக்கூடியவர் அல்ல.
-
88:23
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
ʹIllaa mañ tawallaa wa-kafar,―
எனினும், எவர்கள் புறக்கணித்து நிராகரிக்கிறார்களோ,
-
88:24
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ
Fayuʻaẓẓibuhul laahul ʻAẓaabal ʹakbar.
அவர்களை அல்லாஹ் பெரும் வேதனை செய்வான்.
-
88:25
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ
ʹInna ʹilaynaaa ʹIyaabahum;
நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம்தான் வர வேண்டும்.
-
88:26
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
S̤umma ʹinna ʻalaynaa ḥisaabahum.
நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்குக் கேட்பதும் நம் மீதுதான் கடமையாகும்.
Surah Al-FajrBegins here at 89:1
-
89:1
وَٱلْفَجْرِ
Wal-Fajr;
, 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!
-
89:2
وَلَيَالٍ عَشْرٍ
Wa-Layaalin ʻashr;
, 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!
-
89:3
وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ
Wash-Shafʻi wal-watr;
ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக!
-
89:4
وَٱلَّيْلِ إِذَا يَسْرِ
Wallayli ʹiẓaa yasr;
நிகழ்கின்ற இரவின் மீது சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்).
-
89:5
هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ
Hal fee ẓaalika q̣asamul liẓee ḥijr?
இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கிறது.
-
89:6
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
ʹAlam tara kayfa faʻala Rabbuka biʻAad,―
, 7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
-
89:7
إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ
ʹIrama Ẓaatil ʻimaad,
, 7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
-
89:8
ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَـٰدِ
ʹAllatee lam yukhlaq̣ mis̤luhaa fil bilaad?
அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை.
-
89:9
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ
Wa-S̤amoodal laẓeena jaabuṣ ṣakhra bil-waad?
இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்.
-
89:10
وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ
Wa-Firʻawna ẓil ʹawtaad?
இன்னும், (இராணுவங்களையுடைய) ஆணிக்கார ஃபிர்அவ்னை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்க வில்லையா?)
-
89:11
ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَـٰدِ
ʹAllaẓeena ṭag̣aw fil bilaad.
இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்.
-
89:12
فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ
Faʹaks̤aroo fihal fasaad.
(பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்.
-
89:13
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
Faṣabba ʻalayhim Rabbuka sawṭa ʻaẓaab:
ஆதலால், உங்கள் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக்கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்.
-
89:14
إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ
ʹInna Rabbaka labilmirṣaad.
நிச்சயமாக உமது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கிறான்.
-
89:15
فَأَمَّا ٱلْإِنسَـٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ
Faʹammal ʹiñsaanu ʹiẓaa mab talaahu Rabbuhoo faʹakramahoo wa-naʻ-ʻamah, fayaq̣oolu Rabbeee ʹakraman.
ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான்.
-
89:16
وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَـٰنَنِ
Wa-ʹammaaa ʹiẓaa mab talaahu faq̣adara ʻalayhi rizq̣ah, fayaq̣oolu Rabbeee ʹahaanan.
ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான்.
-
89:17
كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ
Kallaa bal laa tukrimoonal yateem.
(விஷயம்) அவ்வாறல்ல. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை.
-
89:18
وَلَا تَحَـٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
Wa-laa taḥaaaḍḍoona ʻalaa ṭaʻaamil miskeen!―
ஏழைகளுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும் நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை.
-
89:19
وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا
Wa-taʹkuloonat Turaas̤a ʹaklal lammaa,
பிறருடைய சொத்துக்களை உங்கள் சொத்துடன் சேர்த்து புசித்துவிடுகிறீர்கள்.
-
89:20
وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا
Wa-tuḥibboonal maala ḥubbañ jammaa.
மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள்.
-
89:21
كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا
Kallaaa ʹiẓaa dukkatil ʹarḍu dakkañ dakkaa,
அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்,
-
89:22
وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا
Wa-jaaaʹa Rabbuka wal-malaku ṣaffañ ṣaffaa,
உமது இறைவனும் வருவான். வானவர்களும் அணிஅணியாக வருவார்கள்.
-
89:23
وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ
Wa-jeeeʹa Yawmaʹiẓim bi-Jahannam, Yawmaʹiẓiñy yataẓakkarul ʹiñsaanu wa-ʹannaa lahuẓ ẓikraa?
அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டுவரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அப்போது (உதயமாகின்ற) அறிவால் அவனுக்கு என்ன பயன்?
-
89:24
يَقُولُ يَـٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى
Yaq̣oolu yaa-laytanee q̣addamtu li-Ḥayaatee!
‘‘என் வாழ்க்கையில் நான் (ஒரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டுமே!'' என்று புலம்புவான்.
-
89:25
فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ
Fa-Yawmaʹiẓil laa yuʻaẓẓibu ʻAẓaabahooo ʹaḥad,
அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.)
-
89:26
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ
Wa-laa yoos̤iq̣u wa-s̤aaq̣ahooo ʹaḥad.
(பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.)
-
89:27
يَـٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ
Yaaaʹayyatuhan Nafsul muṭmaʹinnah!
(எனினும், அந்நாளில் நல்ல மனிதனை நோக்கி) “நிம்மதிபெற்ற ஆத்மாவே!
-
89:28
ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً
ʹIrjiʻeee ʹilaa Rabbiki raaḍiyatam marḍiyyah!
நீ (இறைவனைக் கொண்டு) திருப்தியடைந்ததாக! (இறைவனால் நீ) திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பச் செல்!'' (என்றும்)
-
89:29
فَٱدْخُلِى فِى عِبَـٰدِى
Fadkhulee fee ʻIbaadee!
‘‘நீ என் நல்லடியார்களில் சேர்ந்து,
-
89:30
وَٱدْخُلِى جَنَّتِى
Wadkhulee Jannatee!
என் சொர்க்கத்திலும் நீ நுழைந்துவிடு'' (என்றும் கூறுவான்).
Surah Al-BaladBegins here at 90:1
-
90:1
لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ
Laaa ʹuq̣simu bihaaẓal Balad;
(நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
-
90:2
وَأَنتَ حِلٌّۢ بِهَـٰذَا ٱلْبَلَدِ
Wa-ʹañta ḥillum bihaaẓal Balad;
அதிலும் நீர் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில்.
-
90:3
وَوَالِدٍ وَمَا وَلَدَ
Wa-Waalidiñw Wamaa Walad;
(மனிதர்களின்) தந்தை மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகள் மீதும் சத்தியமாக!
-
90:4
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِى كَبَدٍ
Laq̣ad khalaq̣nal ʹiñsaana fee kabad.
மெய்யாகவே நாம் மனிதனை சிரமத்தில் மூழ்கியவனாகவே படைத்திருக்கிறோம்.
-
90:5
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ
ʹAyaḥsabu ʹal lañy yaq̣dira ʻalayhi ʹaḥad?
(அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா?
-
90:6
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا
Yaq̣oolu ʹahlaktu maalal lubadaa!
‘‘ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்'' என்று, அவன் (கர்வம் கொண்டு பெருமையாகக்) கூறுகிறான்.
-
90:7
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ
ʹAyaḥsabu ʹal lam yarahooo ʹaḥad?
அவ்வளவு பொருளை ஒருவருமே பார்த்திருக்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானோ?
-
90:8
أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ
ʹAlam najʻal lahoo ʻaynayn?―
(பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? (அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ளவில்லை.)
-
90:9
وَلِسَانًا وَشَفَتَيْنِ
Wa-lisaanañw Washafatayn?―
(பேசக்கூடிய) ஒரு நாவையும், இரு உதடுகளையும் (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத் தானாகவே அவன் அடைந்துவிட்டானா?)
-
90:10
وَهَدَيْنَـٰهُ ٱلنَّجْدَيْنِ
Wa-hadaynaahun najdayn?
(நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்;
-
90:11
فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ
Falaq̣ taḥamal ʻaq̣abah.
எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை.
-
90:12
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ
Wa-maaa ʹadraaka mal ʻaq̣abah?―
(நபியே!) ‘அகபா' என்னவென்று நீர் அறிவீரா?
-
90:13
فَكُّ رَقَبَةٍ
Fakku raq̣abah.
அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது.
-
90:14
أَوْ إِطْعَـٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍ
ʹAw ʹiṭʻaamuñ fee yawmiñ ẓee masg̣abah,
அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
-
90:15
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ
Yateemañ ẓaa maq̣rabah,
அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
-
90:16
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ
ʹAw miskeenañ ẓaa matrabah.
அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
-
90:17
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ
S̤umma kaana minal laẓeena ʹaamanoo wa-tawaaṣaw biṣṣabri wa-tawaaṣaw bil-Marḥamah.
பிறகு, எவர்கள் நம்பிக்கை கொண்டும் ஒருவருக்கொருவர் பொறுமையைக் கடைபிடிக்குமாறு நல்லுபதேசம் செய்துகொண்டும், கருணை காட்டவேண்டும் என்று ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்துகொண்டும் இருக்கிறார்களோ அவர்களிலும் அவர் சேர்ந்துவிடுவார்.
-
90:18
أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ
ʹUlaaaʹika ʹAṣḥaabul Maymanah.
இவர்கள்தான் வலது பக்கத்தில் இருப்பவர்கள்.
-
90:19
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِنَا هُمْ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ
Wallaẓeena kafaroo biʹAayaatinaa hum ʹAṣḥaabul mashʹamah.
எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள்தான் இடப்பக்கத்தில் இருப்பவர்கள்.
-
90:20
عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢ
ʻAlayhim Naarum muʹṣadah.
அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும்.
Surah Ash-ShamsBegins here at 91:1
-
91:1
وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا
Wash-Shamsi wa-ḍuḥaa-haa;
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக,
-
91:2
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا
Wal-Q̣amari ʹiẓaa talaaha;
(அது அஸ்தமித்ததற்குப்) பின் உதயமாகும் சந்திரன் மீதும்,
-
91:3
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
Wan-Nahaari ʹiẓaa jallaahaa,
(சூரியன்) பிரகாசிக்கும் பகலின் மீதும்,
-
91:4
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا
Wal-Layli ʹiẓaa yag̣shaahaa;
(அதை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும்,
-
91:5
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
Wassamaaaʹi wa-maa banaahaa;
வானத்தின் மீதும், அதை அமைத்தவன் மீதும்,
-
91:6
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا
Wal-ʹArḍi wa-maa ṭaḥaahaa;
பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும்,
-
91:7
وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا
Wa-nafsiñw Wamaa sawwaahaa;
ஆத்மாவின் மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும்,
-
91:8
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا
Faʹalhamahaa fujoorahaa wa-taq̣waahaa;―
அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக!
-
91:9
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا
Q̣ad ʹaflaḥa mañ zakkaahaa,
எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார்.
-
91:10
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا
Wa-q̣ad khaaba mañ dassaahaa.
எவன் அதைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான்.
-
91:11
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ
Kaẓẓabat S̤amoodu biṭag̣waahaa.
ஸமூது கூட்டத்தினர் (ஸாலிஹ் நபியைத்) தங்கள் அநியாயத்தால் பொய்யாக்கினார்கள்.
-
91:12
إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا
ʹIẓim baʻas̤a ʹashq̣aahaa,
அவர்களிலுள்ள ஒரு துர்பாக்கியன் முன் வந்தபொழுது,
-
91:13
فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَـٰهَا
Faq̣aala lahum Rasoolul laahi Naaq̣atal laahi wa-suq̣yaahaa!
அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி ‘‘இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாமலும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாமலும்) விட்டு விடுங்கள்'' என்று கூறினார்.
-
91:14
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا
Fakaẓẓaboohu faʻaq̣aroohaa. Fadamdama ʻalayhim Rabbuhum̃ biẓambihim fasawwaahaa!
எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான்.
-
91:15
وَلَا يَخَافُ عُقْبَـٰهَا
Wa-laa yakhaafu ʻuq̣baahaa.
இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை.
Surah Al-LaylBegins here at 92:1
-
92:1
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ
Wal-Layli ʹiẓaa yag̣shaa;
(அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
-
92:2
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
Wan-Nahaari ʹiẓaa tajallaa;
பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக!
-
92:3
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ
Wa-maa khalaq̣aẓ ẓakara wal-ʹuñs̤aaa;
ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
-
92:4
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
ʹInna saʻyakum lashattaa.
(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன.
-
92:5
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ
Faʹammaa man ʹaʻṭaa wattaq̣aa,―
ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து,
-
92:6
وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ
Wa-ṣaddaq̣a bil-Ḥusnaa,―
(இந்த மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கிறாரோ,
-
92:7
فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ
Fasanuyassiruhoo lil-Yusraa.
அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் எளிதாக்கித் தருவோம்.
-
92:8
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ
Wa-ʹammaa mam bakhila wastag̣naa,
எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது,
-
92:9
وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ
Wa-kaẓẓaba bil-Ḥusnaa,―
(இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கிறானோ,
-
92:10
فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ
Fasanuyassiruhoo lilʻusraa;
அவனுக்குக் (கஷ்டத்திற்குரிய) நரகப் பாதையைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்.
-
92:11
وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ
Wa-maa yug̣nee ʻanhu maaluhooo ʹiẓaa taraddaa.
அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால், அவனுடைய பொருள் அவனுக்கு (ஒரு) பயனுமளிக்காது.
-
92:12
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
ʹInna ʻalaynaa lal-hudaa,
நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பது நம்மீதுதான் கடமையாகும்.
-
92:13
وَإِنَّ لَنَا لَلْـَٔاخِرَةَ وَٱلْأُولَىٰ
Wa-ʹinna lanaa lal-ʹAakhirata wal-ʹOolaa.
நிச்சயமாக இம்மையும், மறுமையும் நமக்கே சொந்தமானவை!
-
92:14
فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ
Faʹañẓartukum Naarañ talaz̤̣z̤̣aa.
(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.
-
92:15
لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى
Laa- yaṣlaahaaa ʹillal ʹashq̣aa,―
மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான்.
-
92:16
ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ
ʹAllaẓee kaẓẓaba wa-tawallaa.
அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான்.
-
92:17
وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى
Wa-sa-yujannabuhal ʹatq̣aa,―
இறையச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்.
-
92:18
ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ
ʹAllaẓee yuʹtee maalahoo yatazakkaa,
அவர் (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன் பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்.
-
92:19
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍ تُجْزَىٰٓ
Wa-maa liʹaḥadin ʻiñdahoo min niʻmatiñ tujzaa,
தான் பதில் நன்மை செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் தன் மீது இருக்காது.
-
92:20
إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ
ʹIllab tig̣aaaʹa Wajhi Rabbihil ʹAʻ-laa;
இருப்பினும், மிக்க மேலான தன் இறைவனின் திருமுகத்தை விரும்பியே தவிர (வேறு எதற்காகவும் தானம் செய்ய மாட்டார்).
-
92:21
وَلَسَوْفَ يَرْضَىٰ
Wa-lasawfa yarḍaa.
(இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார்.
Surah Ad-DuhaaBegins here at 93:1
-
93:1
وَٱلضُّحَىٰ
Waḍ-Ḍuḥaa,
காலைப்பொழுதின் மீது சத்தியமாக!
-
93:2
وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ
Wal-Layli ʹiẓaa sajaa,―
மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
-
93:3
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
Maa- wad-daʻaka Rabbuka wa-maa q̣alaa.
(நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை.
-
93:4
وَلَلْـَٔاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ
Wa-lalʹAakhiratu khayrul laka minal ʹOolaa.
(ஒவ்வொரு நாளும் உமது) பிந்திய நிலைமை, முந்திய நிலைமையை விட நிச்சயமாக மிக்க மேலானதாக இருக்கிறது.
-
93:5
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ
Walasawfa yuʻṭeeka Rabbuka fatarḍaa.
உமது இறைவன் மேலும் (பல உயர் பதவிகளை) உமக்கு அளிப்பான். (அவற்றைக் கொண்டு) நீர் திருப்தியடைவீர்.
-
93:6
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَـَٔاوَىٰ
ʹAlam yajidka yateemañ faʹaawaa?
உம்மை அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க வில்லையா?
-
93:7
وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ
Wa-wajadaka ḍaaal-lañ fahadaa.
திகைத்துத் தயங்கியவராக உம்மைக் கண்ட அவன் நேரான வழியில் (உம்மைச்) செலுத்தினான்.
-
93:8
وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَىٰ
Wa-wajadaka ʻaaaʹilañ faʹag̣naa.
முடைப்பட்டவராக உம்மைக் கண்ட அவன் (உம்மைத்) தனவந்தராக்கி வைத்தான். (அல்லவா?)
-
93:9
فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ
Faʹammal yateema falaa taq̣har,
ஆகவே, (இவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் அநாதைகளைக் கடுகடுக்காதீர்.
-
93:10
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ
Wa-ʹammas saaa-ʹila falaa tanhar:
யாசிப்பவரை வெருட்டாதீர்.
-
93:11
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
Wa-ʹammaa biniʻmati Rabbika faḥaddis̤!
(உம்மீது புரிந்துள்ள) உமது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக!
Surah Ash-SharhBegins here at 94:1
-
94:1
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
ʹAlam nashraḥ laka ṣadrak?
(நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா?
-
94:2
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
Wa-waḍaʻnaa ʻañka wizrak,
உமது சுமையையும் உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்.
-
94:3
ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ
ʹAllaẓeee ʹañq̣aḍa z̤̣ahrak?―
அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது.
-
94:4
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
Wa-rafaʻnaa laka ẓikrak?
உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம்.
-
94:5
فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا
Faʹinna maʻal ʻusri yusraa:
நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
-
94:6
إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا
ʹInna maʻal ʻusri yusraa.
மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
-
94:7
فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ
Faʹiẓaa farag̣ta fañṣab,
ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக.
-
94:8
وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب
Wa-ʹilaa Rabbika far-g̣ab.
மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக!
Surah At-TinBegins here at 95:1
-
95:1
وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ
Wat-Teeni waz-Zaytooni,
அத்தியின் மீதும்,ஜெய்தூனின் மீதும் சத்தியமாக!
-
95:2
وَطُورِ سِينِينَ
Wa-Ṭoori Seeneena,
ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக!
-
95:3
وَهَـٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ
Wa-haaẓal Baladil ʹameen,―
அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக,
-
95:4
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ
Laq̣ad khalaq̣nal ʹiñsaana feee ʹaḥsani taq̣weem,
நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம்.
-
95:5
ثُمَّ رَدَدْنَـٰهُ أَسْفَلَ سَـٰفِلِينَ
S̤umma radadnaahu ʹasfala saafileen,―
(அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகிறோம்.
-
95:6
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
ʹIl-lal laẓeena ʹaamanoo wa-ʻamiluṣ ṣaaliḥaati falahum ʹajrun g̣ayru mamnoon.
ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு.
-
95:7
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ
Famaa yukaẓẓibuka baʻdu bid-Deen?
கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (நபியே!) இதற்குப் பின்னர், உம்மை எவர்தான் பொய்யாக்க முடியும்?
-
95:8
أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَـٰكِمِينَ
ʹAlaysal laahu biʹAḥkamil ḥaakimeen?
தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?
Surah Al-'AlaqBegins here at 96:1
-
96:1
ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ
ʹIq̣raʹ bismi Rab-bikal laẓee khalaq̣,
(நபியே! அனைத்தையும்) படைத்த உமது இறைவனின் பெயரால் (அவனது கட்டளைகள் அடங்கிய திரு குர்ஆனை) ஓதுவீராக!
-
96:2
خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِنْ عَلَقٍ
Khalaq̣al ʹiñsaana min ʻalaq̣.
அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைக்கிறான்.
-
96:3
ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ
ʹIq̣raʹ wa-Rabbukal ʹAkram,―
(நபியே! மேலும்) நீர் ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளி!
-
96:4
ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ
ʹAllaẓee ʻallama bil-Q̣alam,―
அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்.
-
96:5
عَلَّمَ ٱلْإِنسَـٰنَ مَا لَمْ يَعْلَمْ
ʻAl-lamal ʹiñsaana maa- lam yaʻlam.
(அதன் மூலம்) மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்.
-
96:6
كَلَّآ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَيَطْغَىٰٓ
Kallaaa ʹinnal ʹiñsaana layaṭg̣aa,
, 7. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
-
96:7
أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ
ʹArra ʹaahus tag̣naa.
, 7. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
-
96:8
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ
ʹInna ʹilaa Rabbikar rujʻaa.
நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் (அவன்) மீள வேண்டும்.
-
96:9
أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ
ʹA-raʹaytal laẓee yanhaa
(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
-
96:10
عَبْدًا إِذَا صَلَّىٰٓ
ʻAbdan ʹiẓaa ṣallaa?
(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
-
96:11
أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ
ʹA-raʹayta ʹiñ kaana ʻalal Hudaa?
அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
-
96:12
أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ
ʹAw ʹamara bit-Taq̣waa?
அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
-
96:13
أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ
ʹA-raʹayta ʹiñ kaẓ-ẓaba wa-tawallaa?
(அவன், அவரைப்) பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீர் கவனித்தீரா?
-
96:14
أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
ʹAlam yaʻlam̃ biʹannal laaha yaraa?
(அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
-
96:15
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ
Kallaa laʹil lam yañtahi lanasfaʻam bin-naaṣiyah,―
, 16. (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
-
96:16
نَاصِيَةٍ كَـٰذِبَةٍ خَاطِئَةٍ
Naaṣiyatiñ kaaẓibatin khaaṭiʹah!
, 16. (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
-
96:17
فَلْيَدْعُ نَادِيَهُۥ
Fal-yadʻu naadiyah:
ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும்.
-
96:18
سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ
Sanadʻuz zabaaniyah!
நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.
-
96:19
كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩
Kallaa: laa- tuṭiʻhu wasjud waq̣tarib!
(நபியே!) நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர். (உமது இறைவனுக்குச்) சிரம் பணிந்து வணங்கி (அவனை) நெருங்குவீராக!
Surah Al-QadrBegins here at 97:1
-
97:1
إِنَّآ أَنزَلْنَـٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ
ʹInnaaa ʹañzalnaahu fee Laylatil Q̣ADR:
நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலதுல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கிவைத்தோம்.
-
97:2
وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ
Wa-maaa ʹadraaka maa- Laylatul Q̣adr?
(நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீர் அறிவீரா?
-
97:3
لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
Laylatul Q̣adri khayrum min ʹalfi Shahr.
கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
-
97:4
تَنَزَّلُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
Tanazzalul malaaaʹikatu war-Rooḥu feehaa biʹiẓni Rab-bihim miñ kulli ʹamr:
அதில் வானவர்களும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்.
-
97:5
سَلَـٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ
Salaamun Hiya ḥattaa maṭ-laʻil Fajr!
‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).
Surah Al-BayyinahBegins here at 98:1
-
98:1
لَمْ يَكُنِ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ وَٱلْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ ٱلْبَيِّنَةُ
Lam yakunil laẓeena kafaroo min ʹAhlil Kitaabi wal-Mushrikeena muñ-fakkeena ḥattaa taʹtiyahumul Bayyinah,
இதை நிராகரிக்கும் வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும் பலர், தங்களிடம் தெளிவான அத்தாட்சி வரும் வரை (ஒரு தெளிவான அத்தாட்சி வந்தால், அதைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இருந்து) விலகாது (உறுதியாகவே) இருந்தனர்.
-
98:2
رَسُولٌ مِّنَ ٱللَّهِ يَتْلُوا۟ صُحُفًا مُّطَهَّرَةً
Rasoolum minal laahi yatloo ṣuḥufam muṭahharah,
(அவர்களிடம் வந்திருக்கும் தெளிவான அத்தாட்சி என்னவென்றால், அவர்களுக்குப்) பரிசுத்தமான வேதங்களை ஓதிக் காண்பிக்கக்கூடிய அல்லாஹ்வினுடைய (இந்தத்) தூதர்தான்.
-
98:3
فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ
Feehaa kutubuñ q̣ayyimah.
(அவர் ஓதிக் காண்பிக்கும்) அதில் நிலையான சட்ட திட்டங்களே வரையப்பட்டிருக்கின்றன.
-
98:4
وَمَا تَفَرَّقَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَةُ
Wa-maa tafarraq̣al laẓeena ʹootul Kitaaba ʹillaa mim baʻdi maa- jaaa-ʹathumul Bayyinah.
(அவர்களின் வரவை எதிர்பார்த்து, அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டிருந்த) வேதத்தை உடையவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி(யாகிய நம் தூதர்) வந்ததன் பின்னர் (அவருக்கு) மாறுசெய்து பிளவுபட்டு விட்டனர்.
-
98:5
وَمَآ أُمِرُوٓا۟ إِلَّا لِيَعْبُدُوا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُوا۟ ٱلزَّكَوٰةَ ۚ وَذَٰلِكَ دِينُ ٱلْقَيِّمَةِ
Wa-maaa ʹumirooo ʹillaa liyaʻbudul laaha mukhliṣeena lahud Deen: ḥunafaaaʹa wa-yuq̣eemuṣ Ṣalaata wa-yuʹtuz Zakaata wa-ẓaalika Deenul Q̣ayyimah.
(எனினும், அவர்கள்) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, மற்ற மார்க்கங்களைப் புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே தவிர, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) அவர்களுக்கு ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம்.
-
98:6
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ وَٱلْمُشْرِكِينَ فِى نَارِ جَهَنَّمَ خَـٰلِدِينَ فِيهَآ ۚ أُو۟لَـٰٓئِكَ هُمْ شَرُّ ٱلْبَرِيَّةِ
ʹInnal laẓeena kafaroo min ʹAhlil Kitaabi wal-Mushrikeena fee naari Jahannama khaalideena feehaa. ʹUlaaaʹika hum sharrul bariyyah.
ஆகவே, வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவரை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக நரக நெருப்பில் தான் இருப்பார்கள். அதில், அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இவர்கள்தான் படைப்புகளில் மகா கெட்டவர்கள்.
-
98:7
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ أُو۟لَـٰٓئِكَ هُمْ خَيْرُ ٱلْبَرِيَّةِ
ʹInnal laẓeena ʹaamanoo wa-ʻamiluṣ ṣaaliḥaati ʹu-laaaʹika hum khayrul bariyyah.
ஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள்(அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.
-
98:8
جَزَآؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّـٰتُ عَدْنٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۖ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ ۚ ذَٰلِكَ لِمَنْ خَشِىَ رَبَّهُۥ
Jazaaaʹuhum ʻiñda Rabbihim Jannaatu ʻadniñ tajree miñ taḥtihal ʹanhaaru khaalideena feehaaa ʹabadaa: raḍiyal laahu ʻanhum wa-raḍoo ʻanh: ẓaalika liman khashiya Rabbah.
அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்தில் உள்ள ‘அத்ன்' என்னும் நிலையான சொர்க்கங்களாகும். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றுமே அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். எவர் தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரோ, அவருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைக்கும்.
Surah Az-ZalzalahBegins here at 99:1
-
99:1
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
ʹIẓaa zul-zilatil ʹArḍu zil-zaalahaa,
(பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது,
-
99:2
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا
Wa-ʹakhrajatil ʹArḍu ʹas̤q̣aalahaa,
அது, தான் சுமந்திருப்பவற்றை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில்,
-
99:3
وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا
Waq̣aalal ʹiñsaanu maa- lahaa?
மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்.
-
99:4
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
Yawmaʹiẓiñ tuḥaddis̤u ʹakhbaarahaa,
அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும்.
-
99:5
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
Biʹanna Rabbaka ʹawḥaa lahaa.
(இவ்வாறே) உமது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்.
-
99:6
يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَـٰلَهُمْ
Yawmaʹiẓiñy yaṣ-durun naasu ʹash-taatal liyuraw ʹaʻmaalahum.
அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.
-
99:7
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ
Famañy yaʻmal mis̤q̣aala ẓarratin khayrañy yarah.
ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார்.
-
99:8
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ
Wa-mañy yaʻmal mis̤q̣aala ẓarratiñ sharrañy yarah.
(அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்.
Surah Al-'AdiyatBegins here at 100:1
-
100:1
وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًا
WalʻAadiyati ḍabḥaa,
மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக!
-
100:2
فَٱلْمُورِيَـٰتِ قَدْحًا
Fal-mooriyaati q̣adḥaa,
(அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும்.
-
100:3
فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا
Fal-mug̣eeraati ṣubḥaa,
இன்னும் அவை அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும்.
-
100:4
فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا
Faʹas̤arna bihee naq̣ʻaa,
(அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப்போல்) புழுதியைக் கிளப்பும்.
-
100:5
فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا
Fawasaṭna bihee jamʻaa,
பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும்.
-
100:6
إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ
ʹInnal ʹIñsaana li-Rabbihee lakanood;
(இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவன் ஆவான்.
-
100:7
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
Wa-ʹinnahoo ʻalaa ẓaalika lashaheed;
நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாவான்.
-
100:8
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ
Wa-ʹinnahoo liḥubbil khayri lashadeed.
நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான்.
-
100:9
۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ
ʹAfalaa yaʻlamu ʹiẓaa buʻs̤ira maa- fil q̣uboor,
, 10. அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
-
100:10
وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ
Waḥuṣṣila maa- fiṣ ṣudoor:
, 10. அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
-
100:11
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ
ʹInna Rabbahum̃ bihim Yawmaʹiẓil la-Khabeer?
நிச்சயமாக மனிதர்களுடைய இறைவன் (தீயவன் யார்? நல்லவன் யார்? என்று) அவர்களை அந்நாளில் நன்கு அறிந்து கொள்வான்.
Surah Al-Qari'ahBegins here at 101:1
-
101:1
ٱلْقَارِعَةُ
ʹAl-Q̣aariʻah:
(மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!
-
101:2
مَا ٱلْقَارِعَةُ
Mal Q̣aariʻah?
(அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன?
-
101:3
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ
Wa-maaa ʹadraaka mal Q̣aariʻah?
(நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா?
-
101:4
يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ
Yawma yakoonun naasu kal-faraashil mabs̤oos̤,
அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்.
-
101:5
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ
Wa-takoonul jibaalu kal-ʻihnil mañfoosh.
கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.
-
101:6
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ
Faʹammaa mañ s̤aq̣ulat mawaazeenuhoo,
எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ,
-
101:7
فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ
Fahuwa fee ʻEeshatir raaḍiyah.
அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்.
-
101:8
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ
Wa-ʹammaa man khaffat mawaazeenuhoo,
எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ,
-
101:9
فَأُمُّهُۥ هَاوِيَةٌ
Faʹummuhoo Haawiyah.
அவன் தங்குமிடம் ஹாவியாதான்.
-
101:10
وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ
Wa-maaa ʹadraaka maa- hiyah?
அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா?
-
101:11
نَارٌ حَامِيَةٌۢ
Naarun ḥaamiyah!
(அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.
Surah At-TakathurBegins here at 102:1
-
102:1
أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
ʹAl-haaku mut-takaas̤ur.
, 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).
-
102:2
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ
Ḥattaa zurtumul maq̣aabir.
, 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).
-
102:3
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
Kallaa sawfa taʻlamoon.
நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.
-
102:4
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
S̤umma kallaa sawfa taʻlamoon!
பின்னர், நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவற்றின் பலன்களையும்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.
-
102:5
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ
Kallaa law taʻlamoona ʻilmal yaq̣een.
நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற உறுதியாக நீங்கள் அறிவீர்களாயின்,
-
102:6
لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ
Latarawunnal Jaḥeem!
நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண்முன்) காண்பீர்கள்.
-
102:7
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ
S̤umma latarawunnahaa ʻaynal yaq̣een!
பிறகு, சந்தேகமற மெய்யாகவே அதை நீங்கள் உங்கள் கண்களால் கண்டுகொள்வீர்கள்.
-
102:8
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
S̤umma latusʹalunna Yawmaʹiẓin ʻanin naʻeem.
(உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
Surah Al-'AsrBegins here at 103:1
-
103:1
وَٱلْعَصْرِ
WalʻAṣr,
காலத்தின் மீது சத்தியமாக!
-
103:2
إِنَّ ٱلْإِنسَـٰنَ لَفِى خُسْرٍ
ʹInnal ʹIñsaana lafee khusr,
(தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக மனிதன் நஷ்டமடைந்து விட்டான்.
-
103:3
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَتَوَاصَوْا۟ بِٱلْحَقِّ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ
ʹIllal laẓeena ʹaamanoo wa-ʻamiluṣ ṣaaliḥaati wa-tawaaṣaw bil-Ḥaq̣q̣i wa-tawaaṣaw biṣ-Ṣabr.
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).
Surah Al-HumazahBegins here at 104:1
-
104:1
وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ
Waylul likulli humazatil lumazah,
குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான்.
-
104:2
ٱلَّذِى جَمَعَ مَالًا وَعَدَّدَهُۥ
ʹAllaẓee jamaʻa maalañw waʻaddadah,
பொருளைச் சேகரித்து (நல்ல வழியில் செலவு செய்யாது) அதை எண்ணிக்கொண்டே இருப்பவன்,
-
104:3
يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ
Yaḥsabu ʹanna maalahooo ʹakhladah!
தன் செல்வம் தன்னை என்றென்றுமே (உலகத்தில்) நிலைத்திருக்கச் செய்யுமென்றும் எண்ணிக் கொண்டான்.
-
104:4
كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ
Kallaa layumbaẓanna fil Ḥuṭamah.
அவ்வாறல்ல! (நிச்சயமாக அவன் மரணிப்பான். பின்னர்) நிச்சயமாக அவன் ‘ஹுதமா' என்னும் நரகத்தில் எறியப்படுவான்.
-
104:5
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ
Wa-maaa ʹadraaka mal Ḥuṭamah?
(நபியே!) ‘ஹுதமா' (என்றால்) என்னவென்று நீர் அறிவீரா?
-
104:6
نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ
Naarul laahil mooq̣adah,
(அதுதான்) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பு.
-
104:7
ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ
ʹAllatee taṭṭaliʻu ʻalal ʹafʹidah:
(அது உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் பாய்ந்துவிடும்.
-
104:8
إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ
ʹinnahaa ʻalayhim muʹṣadah,
, 9. (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
-
104:9
فِى عَمَدٍ مُّمَدَّدَةٍۭ
Fee ʻamadim mumaddadah.
, 9. (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
Surah Al-FilBegins here at 105:1
-
105:1
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَـٰبِ ٱلْفِيلِ
ʹAlam tara kayfa faʻala Rabbuka biʹAṣḥaabil FEEL?
(நபியே!) யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீர் (கவனித்துப்) பார்க்கவில்லையா?
-
105:2
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ
ʹAlam yajʻal kaydahum fee taḍleel?
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிட வில்லையா?
-
105:3
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
Wa-ʹarsala ʻalayhim ṭayran ʹabaabeel,
அவர்கள் மீது பறவைகளை கூட்டங்கூட்டமாக அனுப்பிவைத்தான்.
-
105:4
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
Tarmeehim̃ bihijaaratim miñ sijjeel,
(கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன.
-
105:5
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ
Fajaʻalahum kaʻaṣfim maʹkool.
அதனால், அவன் அவர்களை(ப் பறவைகளால்) கொத்தித் தின்னப்பட்ட கதிர்களைப்போல் ஆக்கி (அழித்து) விட்டான்.
Surah QurayshBegins here at 106:1
-
106:1
لِإِيلَـٰفِ قُرَيْشٍ
Liʹeelaafi Q̣URAYSH,
குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி,
-
106:2
إِۦلَـٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ
ʹEelaafihim riḥlatash shitaaaʹi waṣṣayf,
குளிர்கால பயணத்தையும், கோடைகால பயணத்தையும் அவர்கள் விரும்பிக் கைகொள்ளும்படி செய்ததற்காக,
-
106:3
فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَـٰذَا ٱلْبَيْتِ
Falyaʻbudoo Rabba haaẓal Bayt,
(அதற்கு நன்றி செலுத்துவதற்காக) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள் வணங்கவும்.
-
106:4
ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ
ʹAllaẓeee ʹaṭʻamahum miñ jooʻiñw wa-ʹaamanahum min khawf.
அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) அவர்களுடைய பசிக்கு உணவளித்து வருகிறான். (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்.
Surah Al-Ma'unBegins here at 107:1
-
107:1
أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ
ʹA-raʹaytal laẓee yukaẓẓibu bid-Deen?
(நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
-
107:2
فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ
Faẓaalikal laẓee yaduʻʻul yateem,
(ஆதரவற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்.
-
107:3
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
Wa-laa yaḥuḍḍu ʻalaa ṭaʻaamil miskeen.
அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.
-
107:4
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ
Fawaylul lil-muṣalleen,
(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.
-
107:5
ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
ʹAllaẓeena hum ʻañ ṣalaatihim saahoon,
அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
-
107:6
ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ
ʹAllaẓeena hum yuraaaʹoona,
(மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்.
-
107:7
وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ
Wa-yamnaʻoonal MAAʻOON.
(மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்.
Surah Al-KawtharBegins here at 108:1
-
108:1
إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ
ʹInnaaa ʹaʻṭaynaakal kaws̤ar.
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம்.
-
108:2
فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ
Faṣalli li-Rabbika wanḥar.
ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக.
-
108:3
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ
ʹInna shaaniʹaka huwal ʹabtar.
நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்.
Surah Al-KafirunBegins here at 109:1
-
109:1
قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ
Q̣ul yaaaʹayyuhal KAAFIROON!
(நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!
-
109:2
لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ
Laaa ʹaʻbudu maa- taʻbudoon,
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
-
109:3
وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ
Wa-laaa ʹañtum ʻaabidoona maaa ʹaʻbud.
நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.
-
109:4
وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ
Wa-laaa ʹana ʹaabidum maa ʻabattum,
(அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்.
-
109:5
وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ
Wa-laaa ʹañtum ʻaabidoona maaa ʹaʻbud.
நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.
-
109:6
لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ
Lakum Deenukum wa-liya Deen.
உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்).
Surah An-NasrBegins here at 110:1
-
110:1
إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ
ʹIẓaa jaaaʹa NAṢRUL LAAHI wal-Fatḥ,
(நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து,
-
110:2
وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًا
Waraʹaytan naasa yadkhuloona fee Deenil laahi ʹafwaajaa,
அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீர் கண்டால்,
-
110:3
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ ۚ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢا
Fasabbiḥ bi-Ḥamdi Rabbika wastag̣firh. ʹInna-Hoo kaana Tawwaabaa.
(அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலை(யும்) அங்கீகரிப்பவனாக இருக்கிறான்.
Surah Al-MasadBegins here at 111:1
-
111:1
تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍ وَتَبَّ
Tabbat yadaaa ʹAbee Lahabiñw watabb!
அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்!
-
111:2
مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
Maaa ʹag̣naa ʻanhu maaluhoo wa-maa kasab.
அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது.
-
111:3
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
Sayaṣlaa Naarañ ẓaata lahab,
வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்.
-
111:4
وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ
Wamraʹatuh: ḥammaalatal ḥaṭab,
விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ,
-
111:5
فِى جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍۭ
Fee jeedihaa ḥablum mim masad!
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்.)
Surah Al-IkhlasBegins here at 112:1
-
112:1
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ
Q̣ul Huwal laahu ʹAḥad;
(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்.
-
112:2
ٱللَّهُ ٱلصَّمَدُ
ʹAllaahuṣ Ṣamad;
(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
-
112:3
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
Lam yalid; wa-lam yoolad;
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)
-
112:4
وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ
Wa-lam yakul la-Hoo kufuwan ʹaḥad.
(தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை.
Surah Al-FalaqBegins here at 113:1
-
113:1
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ
Q̣ul ʹaʻooẓu bi-Rabbil Falaq̣,
(நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
-
113:2
مِن شَرِّ مَا خَلَقَ
Miñ sharri maa- khalaq̣:
அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்,
-
113:3
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
Wa-miñ sharri g̣aasiq̣in ʹiẓaa waq̣ab,
(அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்,
-
113:4
وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ
Wa-miñ sharrin Naffaas̤aati fil ʻuq̣ad,
முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,
-
113:5
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
Wa-miñ sharri ḥaasidin ʹiẓaa ḥasad.
பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
Surah An-NasBegins here at 114:1
-
114:1
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
Q̣ul ʹaʻooẓu bi-Rabbin NAAS,
(நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
-
114:2
مَلِكِ ٱلنَّاسِ
Malikin Naas,
(அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்.
-
114:3
إِلَـٰهِ ٱلنَّاسِ
ʹIlaahin Naas,
(அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.
-
114:4
مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ
Miñ sharril Waswaasil khan-Naas,
, 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
-
114:5
ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
ʹAllaẓee yuwaswisu fee ṣudoorin Naas,
, 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
-
114:6
مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ
Minal Jinnati wan-Naaṣ
(அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.