-
1
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ
ʹIẓas Samaaaʹuñ faṭarat;
(உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால்,
-
2
وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ
Wa-ʹiẓal kawaakibuñ tas̤arat;
நட்சத்திரங்கள் சிதறிவிட்டால்,
-
3
وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ
Wa-ʹiẓal biḥaaru fujjirat;
கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால்,
-
4
وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ
Wa-ʹiẓal q̣ubooru buʻs̤irat;
சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,)
-
5
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ
ʻAlimat nafsum maa q̣addamat wa-ʹakhkharat.
ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவற்றையும் நன்கறிந்துகொள்ளும்.
-
6
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ
Yaaaʹayyuhal ʹiñsaanu maa- g̣arraka bi-Rabbikal Kareem?―
மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது?
-
7
ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
ʹAllaẓee khalaq̣aka fasawwaaka faʻadalak;
அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னைப் படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான்.
-
8
فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ
Feee ʹayyi Ṣooratim maa shaaaʹa rakkabak.
அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன் அவயங்களைப் பொறுத்தினான்.
-
9
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
Kallaa bal tukaẓẓiboona bid-Deen!
எனினும், (மனிதர்களே!) நீங்கள் கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகிறீர்கள்.
-
10
وَإِنَّ عَلَيْكُمْ لَحَـٰفِظِينَ
Wa-ʹinna ʻalaykum laḥaafiz̤̣een,―
நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
-
11
كِرَامًا كَـٰتِبِينَ
Kiraamañ Kaatibeen:
அவர்கள் (வானவர்களில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்.
-
12
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
Yaʻlamoona maa- tafʻaloon.
நீங்கள் செய்பவற்றையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்.
-
13
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ
ʹInnal ʹabraara lafee Naʻeem;
ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள்.
-
14
وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍ
Wa-ʹinnal fujjaara lafee Jaḥeem.
நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்.
-
15
يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ
Yaṣlawnahaa Yawmad Deen.
கூலி கொடுக்கும் நாளில் அதையே அவர்கள் அடைவார்கள்.
-
16
وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ
Wa-maa hum ʻanhaa big̣aaaʹibeen.
அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது.
-
17
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ
Wa-maaa ʹadraaka maa- Yawmud Deen?
(நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீர் அறிவீரா?
-
18
ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ
S̤umma maaa ʹadraaka maa- Yawmud Deen?
பிறகு, கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உமக்கு எவரேனும் அறிவித்தனரா?
-
19
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ
Yawma laa- tamliku nafsul linafsiñ shayʹaa: walʹAmru Yawmaʹiẓil lillaah.
அந்நாளில் ஓர் ஆத்மா, மற்றோர் ஆத்மாவுக்கு ஒரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும்.