Back to Quran

ஸூராக்கள் 82

Al-Infitar

The Cleaving · Makki · 19 ayahs

மொழிபெயர்ப்பாளர் Tamil Abdul Hameed Baqavi

Listen to this Surah

Choose play when you are ready to listen. The Quran text remains readable if audio is unavailable.

  1. 1

    إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ

    ʹIẓas Samaaaʹuñ faṭarat;

    (உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால்,

  2. 2

    وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ

    Wa-ʹiẓal kawaakibuñ tas̤arat;

    நட்சத்திரங்கள் சிதறிவிட்டால்,

  3. 3

    وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ

    Wa-ʹiẓal biḥaaru fujjirat;

    கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால்,

  4. 4

    وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ

    Wa-ʹiẓal q̣ubooru buʻs̤irat;

    சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,)

  5. 5

    عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ

    ʻAlimat nafsum maa q̣addamat wa-ʹakhkharat.

    ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவற்றையும் நன்கறிந்துகொள்ளும்.

  6. 6

    يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ

    Yaaaʹayyuhal ʹiñsaanu maa- g̣arraka bi-Rabbikal Kareem?―

    மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது?

  7. 7

    ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ

    ʹAllaẓee khalaq̣aka fasawwaaka faʻadalak;

    அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னைப் படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான்.

  8. 8

    فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ

    Feee ʹayyi Ṣooratim maa shaaaʹa rakkabak.

    அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன் அவயங்களைப் பொறுத்தினான்.

  9. 9

    كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ

    Kallaa bal tukaẓẓiboona bid-Deen!

    எனினும், (மனிதர்களே!) நீங்கள் கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகிறீர்கள்.

  10. 10

    وَإِنَّ عَلَيْكُمْ لَحَـٰفِظِينَ

    Wa-ʹinna ʻalaykum laḥaafiz̤̣een,―

    நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

  11. 11

    كِرَامًا كَـٰتِبِينَ

    Kiraamañ Kaatibeen:

    அவர்கள் (வானவர்களில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்.

  12. 12

    يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

    Yaʻlamoona maa- tafʻaloon.

    நீங்கள் செய்பவற்றையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்.

  13. 13

    إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ

    ʹInnal ʹabraara lafee Naʻeem;

    ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள்.

  14. 14

    وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍ

    Wa-ʹinnal fujjaara lafee Jaḥeem.

    நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்.

  15. 15

    يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ

    Yaṣlawnahaa Yawmad Deen.

    கூலி கொடுக்கும் நாளில் அதையே அவர்கள் அடைவார்கள்.

  16. 16

    وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ

    Wa-maa hum ʻanhaa big̣aaaʹibeen.

    அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது.

  17. 17

    وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

    Wa-maaa ʹadraaka maa- Yawmud Deen?

    (நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீர் அறிவீரா?

  18. 18

    ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

    S̤umma maaa ʹadraaka maa- Yawmud Deen?

    பிறகு, கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உமக்கு எவரேனும் அறிவித்தனரா?

  19. 19

    يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ

    Yawma laa- tamliku nafsul linafsiñ shayʹaa: walʹAmru Yawmaʹiẓil lillaah.

    அந்நாளில் ஓர் ஆத்மா, மற்றோர் ஆத்மாவுக்கு ஒரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும்.