Back to Quran

ஸூராக்கள் 89

Al-Fajr

The Dawn · Makki · 30 ayahs

மொழிபெயர்ப்பாளர் Tamil Abdul Hameed Baqavi

Listen to this Surah

Choose play when you are ready to listen. The Quran text remains readable if audio is unavailable.

  1. 1

    وَٱلْفَجْرِ

    Wal-Fajr;

    , 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!

  2. 2

    وَلَيَالٍ عَشْرٍ

    Wa-Layaalin ʻashr;

    , 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!

  3. 3

    وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ

    Wash-Shafʻi wal-watr;

    ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக!

  4. 4

    وَٱلَّيْلِ إِذَا يَسْرِ

    Wallayli ʹiẓaa yasr;

    நிகழ்கின்ற இரவின் மீது சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்).

  5. 5

    هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ

    Hal fee ẓaalika q̣asamul liẓee ḥijr?

    இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கிறது.

  6. 6

    أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

    ʹAlam tara kayfa faʻala Rabbuka biʻAad,―

    , 7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?

  7. 7

    إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ

    ʹIrama Ẓaatil ʻimaad,

    , 7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?

  8. 8

    ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَـٰدِ

    ʹAllatee lam yukhlaq̣ mis̤luhaa fil bilaad?

    அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை.

  9. 9

    وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ

    Wa-S̤amoodal laẓeena jaabuṣ ṣakhra bil-waad?

    இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்.

  10. 10

    وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ

    Wa-Firʻawna ẓil ʹawtaad?

    இன்னும், (இராணுவங்களையுடைய) ஆணிக்கார ஃபிர்அவ்னை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்க வில்லையா?)

  11. 11

    ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَـٰدِ

    ʹAllaẓeena ṭag̣aw fil bilaad.

    இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்.

  12. 12

    فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ

    Faʹaks̤aroo fihal fasaad.

    (பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்.

  13. 13

    فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ

    Faṣabba ʻalayhim Rabbuka sawṭa ʻaẓaab:

    ஆதலால், உங்கள் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக்கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்.

  14. 14

    إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ

    ʹInna Rabbaka labilmirṣaad.

    நிச்சயமாக உமது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கிறான்.

  15. 15

    فَأَمَّا ٱلْإِنسَـٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ

    Faʹammal ʹiñsaanu ʹiẓaa mab talaahu Rabbuhoo faʹakramahoo wa-naʻ-ʻamah, fayaq̣oolu Rabbeee ʹakraman.

    ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான்.

  16. 16

    وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَـٰنَنِ

    Wa-ʹammaaa ʹiẓaa mab talaahu faq̣adara ʻalayhi rizq̣ah, fayaq̣oolu Rabbeee ʹahaanan.

    ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான்.

  17. 17

    كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ

    Kallaa bal laa tukrimoonal yateem.

    (விஷயம்) அவ்வாறல்ல. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை.

  18. 18

    وَلَا تَحَـٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

    Wa-laa taḥaaaḍḍoona ʻalaa ṭaʻaamil miskeen!―

    ஏழைகளுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும் நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை.

  19. 19

    وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا

    Wa-taʹkuloonat Turaas̤a ʹaklal lammaa,

    பிறருடைய சொத்துக்களை உங்கள் சொத்துடன் சேர்த்து புசித்துவிடுகிறீர்கள்.

  20. 20

    وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا

    Wa-tuḥibboonal maala ḥubbañ jammaa.

    மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள்.

  21. 21

    كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا

    Kallaaa ʹiẓaa dukkatil ʹarḍu dakkañ dakkaa,

    அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்,

  22. 22

    وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا

    Wa-jaaaʹa Rabbuka wal-malaku ṣaffañ ṣaffaa,

    உமது இறைவனும் வருவான். வானவர்களும் அணிஅணியாக வருவார்கள்.

  23. 23

    وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ

    Wa-jeeeʹa Yawmaʹiẓim bi-Jahannam, Yawmaʹiẓiñy yataẓakkarul ʹiñsaanu wa-ʹannaa lahuẓ ẓikraa?

    அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டுவரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அப்போது (உதயமாகின்ற) அறிவால் அவனுக்கு என்ன பயன்?

  24. 24

    يَقُولُ يَـٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى

    Yaq̣oolu yaa-laytanee q̣addamtu li-Ḥayaatee!

    ‘‘என் வாழ்க்கையில் நான் (ஒரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டுமே!'' என்று புலம்புவான்.

  25. 25

    فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ

    Fa-Yawmaʹiẓil laa yuʻaẓẓibu ʻAẓaabahooo ʹaḥad,

    அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.)

  26. 26

    وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ

    Wa-laa yoos̤iq̣u wa-s̤aaq̣ahooo ʹaḥad.

    (பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.)

  27. 27

    يَـٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ

    Yaaaʹayyatuhan Nafsul muṭmaʹinnah!

    (எனினும், அந்நாளில் நல்ல மனிதனை நோக்கி) “நிம்மதிபெற்ற ஆத்மாவே!

  28. 28

    ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً

    ʹIrjiʻeee ʹilaa Rabbiki raaḍiyatam marḍiyyah!

    நீ (இறைவனைக் கொண்டு) திருப்தியடைந்ததாக! (இறைவனால் நீ) திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பச் செல்!'' (என்றும்)

  29. 29

    فَٱدْخُلِى فِى عِبَـٰدِى

    Fadkhulee fee ʻIbaadee!

    ‘‘நீ என் நல்லடியார்களில் சேர்ந்து,

  30. 30

    وَٱدْخُلِى جَنَّتِى

    Wadkhulee Jannatee!

    என் சொர்க்கத்திலும் நீ நுழைந்துவிடு'' (என்றும் கூறுவான்).