-
1
عَمَّ يَتَسَآءَلُونَ
ʻAMMA yatasaaaʹaloon?
(நபியே!) எதைப்பற்றி அவர்கள் (தங்களுக்குள்) கேட்டுக் கொள்கின்றனர்?
-
2
عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ
ʻAnin Nabaʹil ʻAz̤̣eem,
மகத்தான செய்தியைப் பற்றிய(ல்லவா)!
-
3
ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
ʹAllaẓee hum feehi mukhtalifoon.
அதைப்பற்றி அவர்கள் (உண்மைக்கு) முரணான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்.
-
4
كَلَّا سَيَعْلَمُونَ
Kallaa sayaʻlamoon!
(தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்.
-
5
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
S̤umma kallaa sayaʻlamoon!
பின்னர், அவசியம் அதிசீக்கிரத்தில் (அதன் உண்மையை) நன்கு அறிந்து கொள்வார்கள்.
-
6
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَـٰدًا
ʹAlam najʻalil ʹarḍa mihaadaa,
(இவ்வளவு பெரிய) பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக அமைக்க வில்லையா?
-
7
وَٱلْجِبَالَ أَوْتَادًا
Wal-jibaala ʹawtaadaa,
இன்னும், (அதில் நாம்) மலைகளை முளைகளாக (நிறுத்தவில்லையா?)
-
8
وَخَلَقْنَـٰكُمْ أَزْوَٰجًا
Wa-khalaq̣naakum ʹazwaajaa,
ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கிறோம்.
-
9
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
Wa-jaʻalnaa nawmakum subaataa;
நாமே உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம்.
-
10
وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا
Wa-jaʻalnal layla libaasaa,
நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக ஆக்கினோம்.
-
11
وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا
Wa-jaʻalnan nahaara maʻaashaa?
நாமே பகலை (உங்கள்) வாழ்வைத் தேடிக்கொள்ளும் நேரமாக்கினோம்.
-
12
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
Wa-banaynaa fawq̣akum sab-ʻañ shi-daadaa,
உங்களுக்கு மேலிருக்கும் பலமான ஏழு வானங்களையும் நாமே அமைத்தோம்.
-
13
وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
Wa-jaʻalnaa Siraajañw wah-haajaa?
அதில் (சூரியனைப்) பிரகாசிக்கும் தீபமாக அமைத்தோம்.
-
14
وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا
Wa-ʹañzalnaa minal muʻṣiraati maaa-ʹañ s̤ajjaajaa,
கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கிறோம்.
-
15
لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا
Linukhrija bihee ḥabbañw wanabaataa,
அதைக் கொண்டு தானியங்களையும் புற்பூண்டுகளையும் முளைப்பிக்கிறோம்.
-
16
وَجَنَّـٰتٍ أَلْفَافًا
Wa-Jannaatin ʹalfaafaa?
இன்னும், கிளைகள் அடர்ந்த சோலைகளையும் (உற்பத்தி செய்கிறோம்).
-
17
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَـٰتًا
ʹInna Yawmal Faṣli kaana meeq̣aataa,―
நிச்சயமாக (இவர்கள் தர்க்கித்து நிராகரித்துக் கொண்டிருக்கும்) அந்தத் தீர்ப்பு நாள்தான் (விசாரணைக்குக்) குறிப்பிட்ட காலமாகும்.
-
18
يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
Yawma yuñ-fakhu fiṣ Ṣoori fataʹtoona ʹafwaajaa;
(அதற்காக) ஸூர் (என்னும் எக்காளம்) ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்.
-
19
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا
Wa-futiḥa-tis samaaaʹu fakaanat ʹabwaabaa,
வானம் திறக்கப்பட்டு (அதில்) பல வழிகள் ஏற்பட்டு விடும்.
-
20
وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
Wa-suyyi-ratil jibaalu fakaanat saraabaa.
மலைகள் (தம் இடத்திலிருந்து) பெயர்க்கப்பட்டு தூள்தூளாகி (பறந்து) விடும்.
-
21
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
ʹInna Jahannama kaanat mirṣaadaa,―
நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
-
22
لِّلطَّـٰغِينَ مَـَٔابًا
Liṭ-ṭaag̣eena maʹaabaa:
(பாவிகளாகிய) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே.
-
23
لَّـٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا
Laa-bis̤eena feehaaa ʹaḥq̣aabaa.
அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள்.
-
24
لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
Laa- yaẓooq̣oona feehaa bar-dañw walaa- sharaabaa,
, 25. அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
-
25
إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
ʹIllaa ḥameemañwwa g̣assaaq̣aa,―
, 25. அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
-
26
جَزَآءً وِفَاقًا
Jazaaaʹañw wifaaq̣aa.
இது (அவர்கள் செயலுக்குத்) தகுமான கூலியாகும்.
-
27
إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا
ʹInnahum kaanoo laa- yarjoona ḥisaabaa,
ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் (மறுமையின்) கேள்வி கணக்கை நம்பவே இல்லை.
-
28
وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا كِذَّابًا
Wa-kaẓẓaboo biʹAayaatinaa kiẓẓaabaa.
அவர்கள் நம் வசனங்களை மிக அலட்சியமாகப் பொய்ப்பித்தார்கள்.
-
29
وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَـٰهُ كِتَـٰبًا
Wa-kulla shayʹin ʹaḥṣaynaahu Kitaabaa,
எனினும், இவை அனைத்தையும் நாம் (நம் குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம்.
-
30
فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
Faẓooq̣oo falan nazeedakum ʹil-laa ʻaẓaabaa.
ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்த மாட்டோம். ஆகவே, (இதைச்) சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறுவோம்).
-
31
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
ʹInna lil-Mutta-q̣eena mafaazaa;
(ஆயினும்), இறையச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சொர்க்கம் என்னும்) இடம் உண்டு.
-
32
حَدَآئِقَ وَأَعْنَـٰبًا
Ḥadaaaʹiq̣a wa-ʹaʻnaabaa;
(அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு.
-
33
وَكَوَاعِبَ أَتْرَابًا
Wa-kawaaʻiba ʹatraabaa:
(மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்,
-
34
وَكَأْسًا دِهَاقًا
Wa-kaʹsañ dihaaq̣aa.
(பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்).
-
35
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا
Laa- yasmaʻoona feehaa lag̣wañw walaa- kiẓẓaabaa;
அங்கு அவர்கள் வீண் வார்த்தையையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள்.
-
36
جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا
Jazaaaʹam mir Rabbika ʻaṭaaaʹan ḥisaabaa,―
(இவையெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உமது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும்.
-
37
رَّبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا
Rabbis samaawaati wal-ʹarḍi wa-maa baynahumar Raḥmaani laa- yam-likoona minhu khiṭaabaa.
அவனே வானங்கள், பூமி, இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் உரிமையாளனும் அளவற்ற அருளாளனும் ஆவான். எனினும், (அந்நாளில் எவருமே) அவன் முன் பேச சக்தி பெறமாட்டார்கள்.
-
38
يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَـٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا
Yawma yaq̣oomur Rooḥu wal-malaaaʹikatu ṣaf-faa, laa- yatakallamoona ʹil-laa man ʹaẓina lahur Raḥmaanu wa-q̣aala ṣawaabaa.
ஜிப்ரயீலும், வானவர்களும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து ‘‘சரி! பேசுவீராக!'' எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார்.
-
39
ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
Ẓaalikal Yawmul Ḥaq̣q̣: famañ shaaaʹat takhaẓa ʹi-laa Rabbihee maʹaabaa!
இத்தகைய நாள் (வருவது) உறுதி! ஆகவே, விரும்பியவன் தன் இறைவனிடமே தங்கும் இடத்தைத் தேடிக்கொள்ளவும்.
-
40
إِنَّآ أَنذَرْنَـٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَـٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا
ʹInnaaa ʹañẓarnaakum ʻAẓaabañ q̣areebaa,― Yawma yañ-z̤̣urul marʹu maa- q̣addamat yadaahu wa-yaq̣oolul kaafiru yaa-laytanee kuñtu turaabaa!
சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கிறோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் கரங்கள் செய்த செயலின் பலனை(த் தன் கண்ணால்) கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ தான் மண்ணாக ஆகவேண்டுமே என்று புலம்புவான்!