-
1
لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَـٰمَةِ
Laaa ʹuq̣simu bi-Yawmil Q̣iyaamah;
மறுமை நாளின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
-
2
وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ
Wa-laaa ʹuq̣simu bin-nafsil lawwaamah.
(குற்றம் செய்தவனை) நிந்திக்கும் அவனுடைய மனசாட்சியின் மீதும் நான் சத்தியம் செய்கிறேன்.
-
3
أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ
ʹAyaḥsabul ʹiñsaanu ʹal-lan najmaʻa ʻiz̤̣aamah?
(இறந்து உக்கி மண்ணாய்ப் போன) அவனுடைய எலும்புகளை, நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறானா?
-
4
بَلَىٰ قَـٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ
Ballaa Q̣aadireena ʻalaaa ʹan nusawwiya banaanah.
அவ்வாறல்ல! அவனுடைய (சரீர) அமைப்பை (இறந்த பின்னரும் முன்னிருந்தபடி) சரிப்படுத்த நாம் ஆற்றலுடையோம்.
-
5
بَلْ يُرِيدُ ٱلْإِنسَـٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ
Bal yureedul ʹIñsaanu liyafjura ʹamaamah.
எனினும், மனிதன் இறைவன் முன்பாகவே குற்றம் செய்யக் கருதுகிறான்.
-
6
يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَـٰمَةِ
Yasʹalu ʹayyaana Yawmul Q̣IYAAMAH?
(பரிகாசமாக) ‘‘மறுமை நாள் எப்பொழுது வரும்'' என்று கேட்கிறான்.
-
7
فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ
Faʹiẓaa bariq̣al baṣar,
அது (வரும்) சமயம் பார்வை தட்டழிந்து விடும்,
-
8
وَخَسَفَ ٱلْقَمَرُ
Wa-khasafal Q̣amar.
சந்திரனின் பிரகாசம் மங்கி விடும்,
-
9
وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ
Wa-jumiʻash shamsu wal-q̣amar,―
(அதுநாள் வரை பிரிந்திருந்த) சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டு விடும்(போது),
-
10
يَقُولُ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ
Yaq̣oolul ʹiñsaanu Yaw-maʹiẓin ʹaynal mafarr?
அந்நாளில் (தப்பித்துக்கொள்ள) “எங்கு ஓடுவது'' என்று மனிதன் கேட்பான்.
-
11
كَلَّا لَا وَزَرَ
Kallaa laa- wazar!
‘‘முடியவே முடியாது. தப்ப இடமில்லை'' (என்று கூறப்படும்).
-
12
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ
ʹIlaa Rabbika Yawmaʹiẓinil mustaq̣arr.
(நபியே!) அந்நாளில் உமது இறைவனிடமே (அனைவரும்) நிற்க வேண்டியதிருக்கிறது.
-
13
يُنَبَّؤُا۟ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
Yunabbaʹul ʹiñsaanu Yawmaʹiẓim bimaa q̣addama wa-ʹakhkhar.
மனிதன், முன் பின் செய்த பாவங்களைப் பற்றி அந்நாளில் அவனுக்கு அறிவுறுத்தப்படும்.
-
14
بَلِ ٱلْإِنسَـٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌ
Balil ʹiñsaanu ʻalaa nafsihee baṣeerah,
தவிர, ஒவ்வொரு மனிதனும் தன் நிலைமையைத் தானாகவும் அறிந்துகொள்வான்.
-
15
وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ
Wa-law ʹalq̣aa maʻaaẓeerah.
ஆகவே, அவன் (தன் குற்றங்களுக்கு) எவ்வளவு புகல்களைக் கூறிய போதிலும் (அது அங்கீகரிக்கப்படாது).
-
16
لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ
Laa- tuḥarrik bihee lisaanaka litaʻjala bih.
(நபியே! வஹ்யி மூலம் ஜிப்ரயீல் ஓதிக்காண்பிக்கும் வசனங்கள் தவறி விடுமோ என்று பயந்து, அவர் ஓதி முடிப்பதற்கு முன்னர்) நீர் அவசரப்பட்டு அதை ஓத உமது நாவை அசைக்காதீர்.
-
17
إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ
ʹInna ʻalaynaa jamʻahoo wa-q̣urʹaanah:
ஏனென்றால், அதை ஒன்று சேர்த்து (நீர்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும்.
-
18
فَإِذَا قَرَأْنَـٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ
Faʹiẓaa q̣araʹnaahu fattabiʻ q̣ur-ʹaanah:
ஆகவே, (ஜிப்ரயீல் மூலம்) அதை நாம் (உமக்கு) ஓதிக்காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதை நீர் பின்தொடர்ந்து ஓதுவீராக.
-
19
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ
S̤umma ʹinna ʻalaynaa bayaanah:
பின்னர், அதை விவரித்துக் கூறுவதும் நம்மீதுள்ள கடமையாகும்.
-
20
كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ
Kallaa bal tuḥibboonal ʻaajilah,―
எனினும் (மனிதர்களே!) நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையைத்தான் விரும்புகிறீர்கள்.
-
21
وَتَذَرُونَ ٱلْـَٔاخِرَةَ
Wa-taẓaroonal ʹAakhirah.
(ஆதலால்தான், இம்மையை விரும்பி) மறுமையை நீங்கள் விட்டு விடுகிறீர்கள்.
-
22
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
Wujoohuñy Yawmaʹiẓin naaḍirah;―
அந்நாளில் சில(ருடைய) முகங்கள் மிக்க ஒளிவுடன் மகிழ்ச்சியுடையவையாக இருக்கும்.
-
23
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
ʹIlaa Rabbihaa naaz̤̣irah;
(அவை) தங்கள் இறைவனை நோக்கிய வண்ணமாக இருக்கும்.
-
24
وَوُجُوهٌ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌ
Wa-wujoohuñy Yawmaʹiẓim baasirah,
வேறு சில(ருடைய) முகங்களோ அந்நாளில் (துக்கத்தால்) வாடியவையாக இருக்கும்.
-
25
تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ
Taz̤̣unnu ʹañy yufʻala bihaa faaq̣irah;
(பாவச் சுமையின் காரணமாகத்) தங்கள் இடுப்பு முறிந்துவிடுமோ என்று எண்ணி(ப் பயந்து) கொண்டிருப்பார்கள்.
-
26
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ
Kallaaa ʹiẓaa balag̣atit taraaq̣ee,
எனினும், (எவனேனும் நோய்வாய்ப்பட்டு, அவனின்) உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால்,
-
27
وَقِيلَ مَنْ ۜ رَاقٍ
Wa-q̣eela man raaq̣?
(அவனுக்குச் சமீபத்தில் இருப்பவர்கள் அவனைச் சுகமாக்க) மந்திரிப்பவன் யார்? (எங்கிருக்கிறான்?) என்று கேட்கின்றனர்.
-
28
وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ
Wa-z̤̣anna ʹannahul firaaq̣;
எனினும், அவனோ நிச்சயமாக இதுதான் (தன்) பிரிவினை என்பதை (உறுதியாக) அறிந்துகொள்கிறான்.
-
29
وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ
Waltaffatis saaq̣u bissaaq̣:
(அவனுடைய) கெண்டைக்கால், கெண்டைக் காலோடு பின்னிக் கொள்ளும்.
-
30
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ
ʹIlaa Rabbika Yawmaʹiẓinil masaaq̣!
அச்சமயம், அவன் (காரியம் முடிவு பெற்று) உமது இறைவன் பக்கம் ஓட்டப்பட்டு விடுகிறான்.
-
31
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
Falaa Saddaq̣a wa-laa ṣallaa!―
(அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை; தொழவுமில்லை.
-
32
وَلَـٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
Wa-laakiñ kaẓẓaba wa-tawallaa!
ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான்.
-
33
ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ
S̤umma ẓahaba ʹilaaa ʹahlihee yatamaṭṭaa!
பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்று விட்டான்.
-
34
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
ʹAwlaa laka faʹawlaa!
(மனிதனே!) உனக்குக் கேடுதான்; மேலும் கேடுதான்!
-
35
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ
S̤umma ʹawlaa laka faʹawlaa!
பின்னர், உனக்குக் கேடுதான்! மேலும் கேடுதான் (உனக்கு)!
-
36
أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَن يُتْرَكَ سُدًى
ʹAyaḥsabul ʹiñsaanu ʹañy yutraka sudaa?
(ஒரு கேள்வியும் தம்மிடம் கேட்காது) சும்மா விட்டு விடப்படுவோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா?
-
37
أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِىٍّ يُمْنَىٰ
ʹAlam yaku nuṭfatam mim maniyyiñy yumnaa?
அவன் (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட ஓர் இந்திரியத் துளியாக இருக்க வில்லையா?
-
38
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
S̤umma kaana ʻalaq̣atañ fakhalaq̣a fasawwaa.
(இந்திரியமாக இருந்த) பின்னர், அவன் கருவாக மாறினான் (அவனை) அல்லாஹ்தான் படைத்து முழுமையான மனிதனாக ஆக்கிவைத்தான்.
-
39
فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ
Fajaʻala minhuz zawjayniẓ ẓakara wal-ʹuñs̤aa.
ஆண், பெண் ஜோடிகளையும் அதிலிருந்து உற்பத்தி செய்கிறான்.
-
40
أَلَيْسَ ذَٰلِكَ بِقَـٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْـِۧىَ ٱلْمَوْتَىٰ
ʹAlaysa ẓaalika biq̣aadirin ʻalaaa ʹañy yuḥyiyal mawtaa?
(இவற்றையெல்லாம் செய்த) அவன் மரணித்தவர்களை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவனாக இல்லையா?