Frequently Asked Questions about Surah At-Tur
How many verses are in Surah At-Tur?
There are 49 verses in Surah At-Tur.
Is Surah At-Tur a Meccan or Medinan Surah?
Surah At-Tur is a Meccan Surah.
Arabic Text and Translation
Verse 52:1
وَٱلطُّورِ
தூர் (என்னும்) மலையின் மீது சத்தியமாக!
Verse 52:2
وَكِتَـٰبٍ مَّسْطُورٍ
3. விரித்த ஏட்டில் வரி வரியாக எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக!
Verse 52:3
فِى رَقٍّ مَّنشُورٍ
3. விரித்த ஏட்டில் வரி வரியாக எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக!
Verse 52:4
وَٱلْبَيْتِ ٱلْمَعْمُورِ
பைத்துல் மஃமூர் (என்னும் ஆலயத்தின்) மீது சத்தியமாக!
Verse 52:5
وَٱلسَّقْفِ ٱلْمَرْفُوعِ
உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக!
Verse 52:6
وَٱلْبَحْرِ ٱلْمَسْجُورِ
(தொடர்ந்து) அலைகள் மோதிக் கொண்டிருக்கும் சமுத்திரத்தின் மீது சத்தியமாக!
Verse 52:7
إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٌ
(நபியே!) நிச்சயமாக உமது இறைவனின் வேதனை (அவர்களுக்கு) வந்தே தீரும்.
Verse 52:8
مَّا لَهُۥ مِن دَافِعٍ
எவராலும் அதைத் தடுக்க முடியாது.
Verse 52:9
يَوْمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوْرًا
வானமும் துடிதுடித்துக் குமுறும் நாளில்,
Verse 52:10
وَتَسِيرُ ٱلْجِبَالُ سَيْرًا
மலைகள் (பெயர்ந்து) பறந்தோடும் (நாளில்)
Verse 52:11
فَوَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
(நபியே! உம்மைப்) பொய்யாக்கும் இவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
Verse 52:12
ٱلَّذِينَ هُمْ فِى خَوْضٍ يَلْعَبُونَ
அவர்கள் (வீண் விதண்டாவாதத்தில்) மூழ்கி விளையாடிக்கொண்டு இருக்கின்றனர்.
Verse 52:13
يَوْمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا
அவர்கள் நரகத்தின் பக்கம் (அடித்து) வெருட்டி ஓட்டப்படும் நாளில்,
Verse 52:14
هَـٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِى كُنتُم بِهَا تُكَذِّبُونَ
(அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக நெருப்பு இதுதான்'' என்று கூறப்படும்.
Verse 52:15
أَفَسِحْرٌ هَـٰذَآ أَمْ أَنتُمْ لَا تُبْصِرُونَ
இது வெறும் சூனியம்தானா? அல்லது, இதை நீங்கள் (உங்கள் கண்ணால்) பார்க்கவில்லையா?
Verse 52:16
ٱصْلَوْهَا فَٱصْبِرُوٓا۟ أَوْ لَا تَصْبِرُوا۟ سَوَآءٌ عَلَيْكُمْ ۖ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ
அதில் நுழைந்து விடுங்கள். (அதன் வேதனையைப் பொறுத்துச்) சகித்துக் கொண்டிருங்கள்; அல்லது சகிக்காதிருங்கள். (இரண்டும்) உங்களுக்குச் சமமே! (வேதனையில் ஓர் அணுவளவும் குறையாது.) நீங்கள் செய்தவற்றுக்குரிய கூலிதான் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
Verse 52:17
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّـٰتٍ وَنَعِيمٍ
அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்தவர்கள் நிச்சயமாக சொர்க்கங்களிலும் இன்பத்திலும் இருப்பார்கள்.
Verse 52:18
فَـٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُمْ رَبُّهُمْ وَوَقَىٰهُمْ رَبُّهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ
தங்கள் இறைவன் தங்களுக்கு அளித்திருப்பவற்றைப் பற்றியும், நரக வேதனையிலிருந்து தங்களைத் தங்கள் இறைவன் பாதுகாத்துக் கொண்டதைப் பற்றியும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள்.
Verse 52:19
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
(அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாக (இதில் உள்ளவற்றை) மிக்க தாராளமாகப் புசித்துக் கொண்டும், பருகிக் கொண்டும் இருங்கள்'' (என்றும் கூறப்படும்).
Verse 52:20
مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٍ مَّصْفُوفَةٍ ۖ وَزَوَّجْنَـٰهُم بِحُورٍ عِينٍ
வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களின் மீது சாய்ந்(து படுத்)தவர்களாக இருப்பர். நாம் அவர்களுக்கு (‘ஹூருல்ஈன்' என்னும்) கண்ணழகிக(ளாகிய கன்னி)களை திருமணம் செய்து வைப்போம்.