Frequently Asked Questions about Surah An-Najm
How many verses are in Surah An-Najm?
There are 62 verses in Surah An-Najm.
Is Surah An-Najm a Meccan or Medinan Surah?
Surah An-Najm is a Meccan Surah.
Arabic Text and Translation
Verse 53:1
وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ
விழுந்து மறையும் நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
Verse 53:2
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ
(நம் தூதராகிய) உங்கள் தோழர் வழி தவறி விடவுமில்லை; தவறான வழியில் செல்லவுமில்லை.
Verse 53:3
وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ
அவர் தன் விருப்பப்படி எதையும் கூறுவதில்லை.
Verse 53:4
إِنْ هُوَ إِلَّا وَحْىٌ يُوحَىٰ
இது அவருக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டதே தவிர (வேறு) இல்லை.
Verse 53:5
عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰ
(ஜிப்ரயீல் என்னும்) வலுவான ஆற்றலுடையவர் இதை அவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்.
Verse 53:6
ذُو مِرَّةٍ فَٱسْتَوَىٰ
அவர் மிக்க ஆத்ம சக்தியுடையவர். அவர் (தன் இயற்கை ரூபத்தில் நபி முன்) தோன்றினார்.
Verse 53:7
وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ
அவர் உயர்ந்த (வானத்தின்) கடைக்கோடியில் இருந்தார்.
Verse 53:8
ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
இன்னும் நெருங்கினார், (அவர் முன்) இறங்கினார்.
Verse 53:9
فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ
(சேர்ந்த) இரு வில்களைப்போல், அல்லது அதைவிட சமீபமாக அவர் நெருங்கினார்.
Verse 53:10
فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ
(அல்லாஹ்) அவருக்கு (வஹ்யி மூலம்) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய (நபியாகிய) அடியாருக்கு அறிவித்தார்.
Verse 53:11
مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ
(நபியுடைய) உள்ளம், தான் கண்டதைப் பற்றிப் பொய் கூறவில்லை.
Verse 53:12
أَفَتُمَـٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ
அவர் கண்டதைப் பற்றி நீங்கள் (சந்தேகித்து) அவருடன் தர்க்கிக்கிறீர்களா?
Verse 53:13
وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰ
நிச்சயமாக அவர், மற்றொரு முறையும் (தன்னிடத்தில் ஜிப்ரயீலாகிய) அவர் இறங்கக் கண்டிருக்கிறார்.
Verse 53:14
عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ
‘‘ஸித்ரத்துல் முன்தஹா' என்னும் (இலந்தை) மரத்தின் சமீபத்தில்.
Verse 53:15
عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ
அதன் சமீபத்தில்தான் (நல்லடியார்கள்) தங்கும் சொர்க்கம் இருக்கிறது.
Verse 53:16
إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰ
அந்த மரத்தை மூடியிருந்தவை அதை முற்றிலும் மூடிக்கொண்டன.
Verse 53:17
مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ
(அதிலிருந்து அவருடைய) பார்வை விலகவும் இல்லை; கடக்கவும் இல்லை!
Verse 53:18
لَقَدْ رَأَىٰ مِنْ ءَايَـٰتِ رَبِّهِ ٱلْكُبْرَىٰٓ
அவர் தன் இறைவனின் மிகப்பெரிய அத்தாட்சிகளையெல்லாம் மெய்யாகவே கண்டார்.
Verse 53:19
أَفَرَءَيْتُمُ ٱللَّـٰتَ وَٱلْعُزَّىٰ
(நீங்கள் ஆராதனை செய்யும்) லாத், உஜ்ஜா (என்னும் சிலை)களை நீங்கள் கவனித்தீர்களா?
Verse 53:20
وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلْأُخْرَىٰٓ
மற்றொரு மூன்றாவது மனாத் (என்னும் சிலையைப்) பற்றியும் நீங்கள் சிந்தித்தீர்களா? (அவற்றுக்கு ஏதேனும் இத்தகைய சக்தி உண்டா?)