Home  /  Quran  /  Surah

Loading...

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Surah At-Tariq

Surah At-Tariq (The Nightcommer) is Surah 86 of the Holy Quran, a Meccan Surah with 17 verses, available here in Tamil.

Surah 86 Meccan 17 verses Tamil

Verse 86:1

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ

வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக!

Verse 86:2

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ

(நபியே!) உதயமாகக்கூடியது என்னவென்று நீர் அறிவீரா!

Verse 86:3

ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ

(இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற நட்சத்திரம்.

Verse 86:4

إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ

ஒவ்வொரு மனிதனிடமும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) கண்காணிக்கக் கூடிய ஒரு (வான)வர் இல்லாமலில்லை.

Verse 86:5

فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ مِمَّ خُلِقَ

ஆகவே, மனிதன், தான் எதனால் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை கவனிக்கவும்.

Verse 86:6

خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ

குதித்து வெளிப்படும் ஒரு துளித் தண்ணீரைக் கொண்டே படைக்கப்பட்டான்.

Verse 86:7

يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ

அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.

Verse 86:8

إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ

(இவ்வாறு படைக்கின்ற) அவன் (மனிதன் இறந்தபின் உயிர் கொடுத்து) அவனை மீளவைக்கவும் நிச்சயமாக ஆற்றலுடையவன்ன!

Verse 86:9

يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ

என்றைய தினம் எல்லா மர்மங்களும் வெளிப்பட்டுவிடுமோ,

Verse 86:10

فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ

(அன்றைய தினம்) மனிதனுக்கு ஒரு சக்தியும் இருக்காது. உதவி செய்பவனும் இருக்க மாட்டான்.

Verse 86:11

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ

மழை பொழியும் வானத்தின் மீது சத்தியமாக!,

Verse 86:12

وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ

(புற்பூண்டுகள் முளைக்க) வெடிக்கும் பூமியின் மீதும் சத்தியமாக!

Verse 86:13

إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ

மெய்யாகவே இது (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக்கூடிய சொல்லாகும்.

Verse 86:14

وَمَا هُوَ بِٱلْهَزْلِ

இது வீண் பரிகாசமா(ன வார்த்தைய)ல்ல.

Verse 86:15

إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا

(நபியே!) நிச்சயமாக அவர்கள் (உமக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள்.

Verse 86:16

وَأَكِيدُ كَيْدًا

நானும் (அவர்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்வேன்.

Verse 86:17

فَمَهِّلِ ٱلْكَـٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا

ஆகவே, இந்நிராகரிப்பவர்களுக்கு (அது வரை) நீர் அவகாசமளிப்பீராக. (அதிகமல்ல;) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளிப்பீராக.