Home  /  Quran  /  Surah
Loading...
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Surah Al-Ala

Surah Al-Ala (The Most High) is Surah 87 of the Holy Quran, a Meccan Surah with 19 verses, available here in Tamil.

Surah 87 Meccan 19 verses Tamil

Verse 87:1

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَی ۟ۙ

Sabbiḥis ma Rabbikal ʹAʻlaa,

(நபியே!) மிக மேலான உமது இறைவனின் திருப்பெயரை நீர் புகழ்ந்து துதி செய்வீராக;

Verse 87:2

الَّذِیْ خَلَقَ فَسَوّٰی ۟

ʹAllaẓee khalaq̣a fasawwaa;

அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, (அவற்றை) ஒழுங்குபடுத்தியவன்.

Verse 87:3

وَالَّذِیْ قَدَّرَ فَهَدٰی ۟

Wallaẓee q̣addara fahadaa;

அவனே (அவற்றுக்கு வேண்டிய சகலவற்றையும்) நிர்ணயம் செய்து, (அவற்றை அடையக் கூடிய) வழிகளையும் (அவற்றுக்கு) அறிவித்தான்.

Verse 87:4

وَالَّذِیْۤ اَخْرَجَ الْمَرْعٰی ۟

Wallaẓeee ʹakhrajal marʻaa,

அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சல் பொருள்களையும் வெளிப்படுத்துகிறான்.

Verse 87:5

فَجَعَلَهٗ غُثَآءً اَحْوٰی ۟ؕ

Fajaʻalahoo g̣us̤aaaʹan ʹaḥwaa.

பின்னர் அவற்றை உலர்ந்த சருகுகளாக ஆக்குகிறான்.

Verse 87:6

سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰۤی ۟ۙ

Sanuq̣riʹuka falaa tañsaa,

, 7. (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்.

Verse 87:7

اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ اِنَّهٗ یَعْلَمُ الْجَهْرَ وَمَا یَخْفٰی ۟ؕ

ʹIllaa maa- shaaaʹal laah: ʹinna-Hoo yaʻlamul jahra wa-maa yakhfaa.

, 7. (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்.

Verse 87:8

وَنُیَسِّرُكَ لِلْیُسْرٰی ۟ۚۖ

Wa-nu-yassiruka lil-Yusraa,

சொர்க்கப் பாதையை நாம் உமக்கு எளிதாக்கித் தருவோம்.

Verse 87:9

فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰی ۟ؕ

Faẓakkir ʹin nafaʻatiẓ ẓikraa.

ஆகவே, நல்லுபதேசம் (மக்களுக்குப்) பயனளிக்கின்ற வரை நீர் உபதேசித்துக் கொண்டே வருவீராக.

Verse 87:10

سَیَذَّكَّرُ مَنْ یَّخْشٰی ۟ۙ

Sayaẓẓakkaru mañy yakhshaa:

நிச்சயமாக எவர் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ அவர், (இதைக் கொண்டு) நல்லறிவை அடைவார்.

Verse 87:11

وَیَتَجَنَّبُهَا الْاَشْقَی ۟ۙ

Wa-yatajannabuhal ʹashq̣aa,

துர்ப்பாக்கியமுடையவனோ, இதிலிருந்து விலகிக்கொள்வான்.

Verse 87:12

الَّذِیْ یَصْلَی النَّارَ الْكُبْرٰی ۟ۚ

ʹAllaẓee yaṣlan Naaral kubraa,

(எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை அடைவான்.

Verse 87:13

ثُمَّ لَا یَمُوْتُ فِیْهَا وَلَا یَحْیٰی ۟ؕ

S̤umma laa- yamootu feehaa wa-laa yaḥyaa.

பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான்.

Verse 87:14

قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰی ۟ۙ

Q̣ad ʹaflaḥa mañ tazakkaa.

எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார்.

Verse 87:15

وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰی ۟ؕ

Wa-ẓakaras ma Rabbihee faṣallaa.

அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார்.

Verse 87:16

بَلْ تُؤْثِرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ۚۖ

Bal tuʹs̤iroonal ḥayaatad dunyaa;

எனினும், நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.

Verse 87:17

وَالْاٰخِرَةُ خَیْرٌ وَّاَبْقٰی ۟ؕ

Wal-ʹAakhiratu khayruñw waʹabq̣aa.

மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.

Verse 87:18

اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الْاُوْلٰی ۟ۙ

ʹInna haaẓaa lafiṣ Ṣuḥufil ʹoolaa,―

நிச்சயமாக இது முன்னுள்ள வேதங்களிலும்,

Verse 87:19

صُحُفِ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی ۟۠

Ṣuḥufi ʹIbraaheema wa-Moosaa.

இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் இருக்கிறது.