Surah Al-Ala
Surah Al-Ala (The Most High) is Surah 87 of the Holy Quran, a Meccan Surah with 19 verses, available here in Tamil.
Verse 87:1
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَی ۟ۙ
Sabbiḥis ma Rabbikal ʹAʻlaa,
(நபியே!) மிக மேலான உமது இறைவனின் திருப்பெயரை நீர் புகழ்ந்து துதி செய்வீராக;
Verse 87:2
الَّذِیْ خَلَقَ فَسَوّٰی ۟
ʹAllaẓee khalaq̣a fasawwaa;
அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, (அவற்றை) ஒழுங்குபடுத்தியவன்.
Verse 87:3
وَالَّذِیْ قَدَّرَ فَهَدٰی ۟
Wallaẓee q̣addara fahadaa;
அவனே (அவற்றுக்கு வேண்டிய சகலவற்றையும்) நிர்ணயம் செய்து, (அவற்றை அடையக் கூடிய) வழிகளையும் (அவற்றுக்கு) அறிவித்தான்.
Verse 87:4
وَالَّذِیْۤ اَخْرَجَ الْمَرْعٰی ۟
Wallaẓeee ʹakhrajal marʻaa,
அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சல் பொருள்களையும் வெளிப்படுத்துகிறான்.
Verse 87:5
فَجَعَلَهٗ غُثَآءً اَحْوٰی ۟ؕ
Fajaʻalahoo g̣us̤aaaʹan ʹaḥwaa.
பின்னர் அவற்றை உலர்ந்த சருகுகளாக ஆக்குகிறான்.
Verse 87:6
سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰۤی ۟ۙ
Sanuq̣riʹuka falaa tañsaa,
, 7. (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்.
Verse 87:7
اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ اِنَّهٗ یَعْلَمُ الْجَهْرَ وَمَا یَخْفٰی ۟ؕ
ʹIllaa maa- shaaaʹal laah: ʹinna-Hoo yaʻlamul jahra wa-maa yakhfaa.
, 7. (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்.
Verse 87:8
وَنُیَسِّرُكَ لِلْیُسْرٰی ۟ۚۖ
Wa-nu-yassiruka lil-Yusraa,
சொர்க்கப் பாதையை நாம் உமக்கு எளிதாக்கித் தருவோம்.
Verse 87:9
فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰی ۟ؕ
Faẓakkir ʹin nafaʻatiẓ ẓikraa.
ஆகவே, நல்லுபதேசம் (மக்களுக்குப்) பயனளிக்கின்ற வரை நீர் உபதேசித்துக் கொண்டே வருவீராக.
Verse 87:10
سَیَذَّكَّرُ مَنْ یَّخْشٰی ۟ۙ
Sayaẓẓakkaru mañy yakhshaa:
நிச்சயமாக எவர் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ அவர், (இதைக் கொண்டு) நல்லறிவை அடைவார்.
Verse 87:11
وَیَتَجَنَّبُهَا الْاَشْقَی ۟ۙ
Wa-yatajannabuhal ʹashq̣aa,
துர்ப்பாக்கியமுடையவனோ, இதிலிருந்து விலகிக்கொள்வான்.
Verse 87:12
الَّذِیْ یَصْلَی النَّارَ الْكُبْرٰی ۟ۚ
ʹAllaẓee yaṣlan Naaral kubraa,
(எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை அடைவான்.
Verse 87:13
ثُمَّ لَا یَمُوْتُ فِیْهَا وَلَا یَحْیٰی ۟ؕ
S̤umma laa- yamootu feehaa wa-laa yaḥyaa.
பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான்.
Verse 87:14
قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰی ۟ۙ
Q̣ad ʹaflaḥa mañ tazakkaa.
எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார்.
Verse 87:15
وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰی ۟ؕ
Wa-ẓakaras ma Rabbihee faṣallaa.
அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார்.
Verse 87:16
بَلْ تُؤْثِرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ۚۖ
Bal tuʹs̤iroonal ḥayaatad dunyaa;
எனினும், நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
Verse 87:17
وَالْاٰخِرَةُ خَیْرٌ وَّاَبْقٰی ۟ؕ
Wal-ʹAakhiratu khayruñw waʹabq̣aa.
மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.
Verse 87:18
اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الْاُوْلٰی ۟ۙ
ʹInna haaẓaa lafiṣ Ṣuḥufil ʹoolaa,―
நிச்சயமாக இது முன்னுள்ள வேதங்களிலும்,
Verse 87:19
صُحُفِ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی ۟۠
Ṣuḥufi ʹIbraaheema wa-Moosaa.
இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் இருக்கிறது.