Frequently Asked Questions about Surah An-Naba
How many verses are in Surah An-Naba?
There are 40 verses in Surah An-Naba.
Is Surah An-Naba a Meccan or Medinan Surah?
Surah An-Naba is a Meccan Surah.
Arabic Text and Translation
Verse 78:1
عَمَّ يَتَسَآءَلُونَ
(நபியே!) எதைப்பற்றி அவர்கள் (தங்களுக்குள்) கேட்டுக் கொள்கின்றனர்?
Verse 78:2
عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ
மகத்தான செய்தியைப் பற்றிய(ல்லவா)!
Verse 78:3
ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
அதைப்பற்றி அவர்கள் (உண்மைக்கு) முரணான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்.
Verse 78:4
كَلَّا سَيَعْلَمُونَ
(தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்.
Verse 78:5
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
பின்னர், அவசியம் அதிசீக்கிரத்தில் (அதன் உண்மையை) நன்கு அறிந்து கொள்வார்கள்.
Verse 78:6
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَـٰدًا
(இவ்வளவு பெரிய) பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக அமைக்க வில்லையா?
Verse 78:7
وَٱلْجِبَالَ أَوْتَادًا
இன்னும், (அதில் நாம்) மலைகளை முளைகளாக (நிறுத்தவில்லையா?)
Verse 78:8
وَخَلَقْنَـٰكُمْ أَزْوَٰجًا
ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கிறோம்.
Verse 78:9
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
நாமே உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம்.
Verse 78:10
وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا
நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக ஆக்கினோம்.
Verse 78:11
وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا
நாமே பகலை (உங்கள்) வாழ்வைத் தேடிக்கொள்ளும் நேரமாக்கினோம்.
Verse 78:12
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
உங்களுக்கு மேலிருக்கும் பலமான ஏழு வானங்களையும் நாமே அமைத்தோம்.
Verse 78:13
وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
அதில் (சூரியனைப்) பிரகாசிக்கும் தீபமாக அமைத்தோம்.
Verse 78:14
وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا
கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கிறோம்.
Verse 78:15
لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا
அதைக் கொண்டு தானியங்களையும் புற்பூண்டுகளையும் முளைப்பிக்கிறோம்.
Verse 78:16
وَجَنَّـٰتٍ أَلْفَافًا
இன்னும், கிளைகள் அடர்ந்த சோலைகளையும் (உற்பத்தி செய்கிறோம்).
Verse 78:17
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَـٰتًا
நிச்சயமாக (இவர்கள் தர்க்கித்து நிராகரித்துக் கொண்டிருக்கும்) அந்தத் தீர்ப்பு நாள்தான் (விசாரணைக்குக்) குறிப்பிட்ட காலமாகும்.
Verse 78:18
يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
(அதற்காக) ஸூர் (என்னும் எக்காளம்) ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்.
Verse 78:19
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا
வானம் திறக்கப்பட்டு (அதில்) பல வழிகள் ஏற்பட்டு விடும்.
Verse 78:20
وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
மலைகள் (தம் இடத்திலிருந்து) பெயர்க்கப்பட்டு தூள்தூளாகி (பறந்து) விடும்.