Home  /  Quran  /  Surah
Loading...
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Surah Al-Mursalat

Surah Al-Mursalat (Those Sent Forth) is Surah 77 of the Holy Quran, a Meccan Surah with 50 verses, available here in Tamil.

Surah 77 Meccan 50 verses Tamil

Verse 77:1

وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۟ۙ

WALMURSALAATI ʻurfaa,

நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீது சத்தியமாக!

Verse 77:2

فَالْعٰصِفٰتِ عَصْفًا ۟ۙ

Falʻaaṣifaati ʻaṣfaa,

இன்னும் அதி வேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகள் மீது சத்தியமாக!

Verse 77:3

وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۟ۙ

Wannaashiraati nashraa,

(மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்கள் மீதும் சத்தியமாக!

Verse 77:4

فَالْفٰرِقٰتِ فَرْقًا ۟ۙ

Falfaariq̣aati farq̣aa,

(உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப்பவை(யான வேதங்கள்) மீதும் சத்தியமாக!

Verse 77:5

فَالْمُلْقِیٰتِ ذِكْرًا ۟ۙ

Falmulq̣iyaati ẓikraa,

, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!

Verse 77:6

عُذْرًا اَوْ نُذْرًا ۟ۙ

ʻUẓran ʹaw nuẓraa;―

, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!

Verse 77:7

اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌ ۟ؕ

ʹInnamaa tooʻadoona lawaaq̣iʻ.

நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்.

Verse 77:8

فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْ ۟ۙ

Faʹiẓan nujoomu ṭumisat;

அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும்.

Verse 77:9

وَاِذَا السَّمَآءُ فُرِجَتْ ۟ۙ

Wa-ʹiẓas samaaaʹu furijat;

அப்போது வானம் திறக்கப்பட்டுவிடும்.

Verse 77:10

وَاِذَا الْجِبَالُ نُسِفَتْ ۟ۙ

Wa-ʹiẓal jibaalu nusifat;

அப்போது மலைகள் (தூசிகளைப் போல்) தவிடு பொடியாக்கப்படும்.

Verse 77:11

وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْ ۟ؕ

Wa-ʹizar rusulu ʹuq̣q̣itat;

அப்போது தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.

Verse 77:12

لِاَیِّ یَوْمٍ اُجِّلَتْ ۟ؕ

Liʹayyi Yawmin ʹujjilat?

(இவை எல்லாம்) எதுவரை பிற்படுத்தப்பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீர் அறிவீரா)?

Verse 77:13

لِیَوْمِ الْفَصْلِ ۟ۚ

Li-Yawmil faṣl.

தீர்ப்பு கூறப்படும் நாள் வரைதான்!

Verse 77:14

وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الْفَصْلِ ۟ؕ

Wa-maaa ʹadraaka maa- Yawmul faṣl?

(நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீர் அறிவீரா?.

Verse 77:15

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

Wayluñy Yawmaʹiẓil lilmukaẓẓibeen!

(நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

Verse 77:16

اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِیْنَ ۟ؕ

ʹAlam nuhlikil ʹawwaleen?

(அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா?

Verse 77:17

ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِیْنَ ۟

S̤umma nutbiʻuhumul ʹaakhireen.

அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்து போன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம்,

Verse 77:18

كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِیْنَ ۟

Kaẓaalika nafʻalu bilmujrimeen.

(அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளிகளையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம்.

Verse 77:19

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

Wayluñy Yawmaʹiẓil lil-mukaẓẓibeen!

ஆகவே, (நம் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Verse 77:20

اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ ۟ۙ

ʹAlam nakhlukkum mim maaaʹim maheen?

ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களைப் படைக்கவில்லையா?

Verse 77:21

فَجَعَلْنٰهُ فِیْ قَرَارٍ مَّكِیْنٍ ۟ۙ

Fajaʻalnaahu fee q̣araarim makeen,

, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,

Verse 77:22

اِلٰی قَدَرٍ مَّعْلُوْمٍ ۟ۙ

ʹIlaa q̣adarim maʻloom?

, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,

Verse 77:23

فَقَدَرْنَا ۖۗ فَنِعْمَ الْقٰدِرُوْنَ ۟

Faq̣adarnaa faniʻmal Q̣aadiroon.

பின்னர் நாமே அதை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர்.

Verse 77:24

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

Wayluñy Yawmaʹiẓil lilmukaẓẓibeen!

ஆகவே, (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Verse 77:25

اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًا ۟ۙ

ʹAlam najʻalil ʹarḍa kifaataa,

, 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?

Verse 77:26

اَحْیَآءً وَّاَمْوَاتًا ۟ۙ

ʹAḥyaaaʹañw Waʹamwaataa,

, 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?

Verse 77:27

وَّجَعَلْنَا فِیْهَا رَوَاسِیَ شٰمِخٰتٍ وَّاَسْقَیْنٰكُمْ مَّآءً فُرَاتًا ۟ؕ

Wa-jaʻalnaa feehaa rawaasiya shaamikhaatiñw waʹasq̣aynaakum maaaʹañ furaataa?

அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து (அவற்றிலிருந்து) மதுரமான நீரையும் உங்களுக்குப் புகட்டுகிறோம்.

Verse 77:28

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

Wayluñy Yawmaʹiẓil lilmukaẓẓibeen!

(நம் அருட்கொடைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Verse 77:29

اِنْطَلِقُوْۤا اِلٰی مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟ۚ

ʹIñṭaliq̣ooo ʹilaa maa- kuñtum̃ bihee tukaẓẓiboon:

‘‘எ(ந்த நரகத்)தை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அதன் பாலே நீங்கள் செல்லுங்கள்.

Verse 77:30

اِنْطَلِقُوْۤا اِلٰی ظِلٍّ ذِیْ ثَلٰثِ شُعَبٍ ۟ۙ

ʹIñṭaliq̣ooo ʹilaa z̤̣illiñ ẓee s̤alaas̤i shuʻab.

மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்'' (என்றும் கூறப்படும்).

Verse 77:31

لَّا ظَلِیْلٍ وَّلَا یُغْنِیْ مِنَ اللَّهَبِ ۟ؕ

laa-Laa z̤̣aleeliñw wa yug̣nee minal lahab.

அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது.

Verse 77:32

اِنَّهَا تَرْمِیْ بِشَرَرٍ كَالْقَصْرِ ۟ۚ

ʹInnahaa tarmee bisharariñ kalq̣aṣr,

(எனினும்,) பெரிய மாளிகைகளைப்போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக் கொண்டே இருக்கும்.

Verse 77:33

كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفْرٌ ۟ؕ

Kaʹannahoo jimaalatuñ ṣufr.

அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும்.

Verse 77:34

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

Wayluñy Yawmaʹiẓil lilmukaẓẓibeen!

(இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Verse 77:35

هٰذَا یَوْمُ لَا یَنْطِقُوْنَ ۟ۙ

Haaẓaa Yawmu laa- yañṭiq̣oon,

இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்.

Verse 77:36

وَلَا یُؤْذَنُ لَهُمْ فَیَعْتَذِرُوْنَ ۟

Wa-laa yuʹẓanu lahum fayaʻtaẓiroon.

மேலும், புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது.

Verse 77:37

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

Wayluñy Yawmaʹiẓil lilmukaẓẓibeen!

(இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Verse 77:38

هٰذَا یَوْمُ الْفَصْلِ ۚ جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِیْنَ ۟

Haaẓaa Yawmul Faṣl! Jamaʻnaakum wal-ʹawwaleen!

இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள்ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம்.

Verse 77:39

فَاِنْ كَانَ لَكُمْ كَیْدٌ فَكِیْدُوْنِ ۟

Faʹiñ kaana lakum kayduñ fakeedoon!

ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, ‘‘தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்'' (என்றும் கூறப்படும்).

Verse 77:40

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟۠

Wayluñy Yawmaʹiẓil lilmukaẓẓibeen!

(இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

Verse 77:41

اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ ظِلٰلٍ وَّعُیُوْنٍ ۟ۙ

ʹInnal Muttaq̣eena fee z̤̣ilaaliñw waʻuyoon,

நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சொர்க்கத்திலுள்ள மரங்களின்) நிழல்களிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள்.

Verse 77:42

وَّفَوَاكِهَ مِمَّا یَشْتَهُوْنَ ۟ؕ

Wa-fawaakiha mimmaa yashtahoon.

அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு.

Verse 77:43

كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

Kuloo washraboo haneeeʹam bimaa kuñtum taʻmaloon.

(அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவற்றைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்'' (என்று கூறப்படும்).

Verse 77:44

اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟

ʹInnaa kaẓaalika najzil Muḥsineen.

இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுப்போம்.

Verse 77:45

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

Wayluñy Yawmaʹiẓil lil-Mukaẓẓibeen!

(இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Verse 77:46

كُلُوْا وَتَمَتَّعُوْا قَلِیْلًا اِنَّكُمْ مُّجْرِمُوْنَ ۟

Kuloo wa-tamattaʻoo q̣aleelan ʹinnakum mujrimoon.

(இதைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தான்.

Verse 77:47

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

Wayluñy Yawmaʹiẓil lil-Mukaẓẓibeen!

(இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Verse 77:48

وَاِذَا قِیْلَ لَهُمُ ارْكَعُوْا لَا یَرْكَعُوْنَ ۟

Wa-ʹiẓaa q̣eela lahumur kaʻoo laa- yarkaʻoon.

அவர்களை நோக்கி, ‘‘(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்'' என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள்.

Verse 77:49

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

Wayluñy Yawmaʹiẓil lil-Mukaẓẓibeen!

(அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Verse 77:50

فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَهٗ یُؤْمِنُوْنَ ۟۠

Fabiʹayyi Ḥadees̤im baʻdahoo yuʹminoon?

இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ!