Frequently Asked Questions about Surah Al-Mursalat
How many verses are in Surah Al-Mursalat?
There are 50 verses in Surah Al-Mursalat.
Is Surah Al-Mursalat a Meccan or Medinan Surah?
Surah Al-Mursalat is a Meccan Surah.
Arabic Text and Translation
Verse 77:1
وَٱلْمُرْسَلَـٰتِ عُرْفًا
நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீது சத்தியமாக!
Verse 77:2
فَٱلْعَـٰصِفَـٰتِ عَصْفًا
இன்னும் அதி வேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகள் மீது சத்தியமாக!
Verse 77:3
وَٱلنَّـٰشِرَٰتِ نَشْرًا
(மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்கள் மீதும் சத்தியமாக!
Verse 77:4
فَٱلْفَـٰرِقَـٰتِ فَرْقًا
(உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப்பவை(யான வேதங்கள்) மீதும் சத்தியமாக!
Verse 77:5
فَٱلْمُلْقِيَـٰتِ ذِكْرًا
6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
Verse 77:6
عُذْرًا أَوْ نُذْرًا
6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
Verse 77:7
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ
நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்.
Verse 77:8
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ
அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும்.
Verse 77:9
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ
அப்போது வானம் திறக்கப்பட்டுவிடும்.
Verse 77:10
وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ
அப்போது மலைகள் (தூசிகளைப் போல்) தவிடு பொடியாக்கப்படும்.
Verse 77:11
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ
அப்போது தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.
Verse 77:12
لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ
(இவை எல்லாம்) எதுவரை பிற்படுத்தப்பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீர் அறிவீரா)?
Verse 77:13
لِيَوْمِ ٱلْفَصْلِ
தீர்ப்பு கூறப்படும் நாள் வரைதான்!
Verse 77:14
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ
(நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீர் அறிவீரா?.
Verse 77:15
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
(நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
Verse 77:16
أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ
(அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா?
Verse 77:17
ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْـَٔاخِرِينَ
அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்து போன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம்,
Verse 77:18
كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ
(அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளிகளையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம்.
Verse 77:19
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
ஆகவே, (நம் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
Verse 77:20
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ
ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களைப் படைக்கவில்லையா?