Home  /  Quran  /  Surah

Loading...

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Surah Al-Qariah

Surah Al-Qariah (The Calamity) is Surah 101 of the Holy Quran, a Meccan Surah with 11 verses, available here in Tamil.

Surah 101 Meccan 11 verses Tamil

Verse 101:1

ٱلْقَارِعَةُ

(மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!

Verse 101:2

مَا ٱلْقَارِعَةُ

(அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன?

Verse 101:3

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ

(நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா?

Verse 101:4

يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ

அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்.

Verse 101:5

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ

கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.

Verse 101:6

فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ

எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ,

Verse 101:7

فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ

அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்.

Verse 101:8

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ

எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ,

Verse 101:9

فَأُمُّهُۥ هَاوِيَةٌ

அவன் தங்குமிடம் ஹாவியாதான்.

Verse 101:10

وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ

அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா?

Verse 101:11

نَارٌ حَامِيَةٌۢ

(அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.