Frequently Asked Questions about Surah Al-Maarij
How many verses are in Surah Al-Maarij?
There are 44 verses in Surah Al-Maarij.
Is Surah Al-Maarij a Meccan or Medinan Surah?
Surah Al-Maarij is a Meccan Surah.
Arabic Text and Translation
Verse 70:1
سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَاقِعٍ
(நபியே! நிராகரிப்பவர்களுக்குச்) சம்பவிக்கக்கூடிய வேதனையைப் பற்றி கேட்பவன் ஒருவன் (உம்மிடம் அது) எப்பொழுது வருமென(ப் பரிகாசமாக)க் கேட்கிறான்.
Verse 70:2
لِّلْكَـٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌ
நிராகரிப்பவர்களுக்கு (அது சம்பவிக்கும் சமயத்தில்) அதைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை.
Verse 70:3
مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ
உயர்ப் பாதைகளையுடைய அல்லாஹ்வினால் (அது சம்பவிக்கும்).
Verse 70:4
تَعْرُجُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ
அந்நாளில் வானவர்களும், ஜிப்ரயீலும் அவனிடம் போய்ச் சேருவார்கள். (அந்நாள்) ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமாக இருக்கும்.
Verse 70:5
فَٱصْبِرْ صَبْرًا جَمِيلًا
(நபியே!) நீர் நேர்த்தியான சாந்தத்தோடு பொறுத்திருப்பீராக!
Verse 70:6
إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًا
(எனினும்,) நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாக எண்ணுகின்றனர்.
Verse 70:7
وَنَرَىٰهُ قَرِيبًا
நாமோ அதை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
Verse 70:8
يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِ
அந்நாளில் வானம் பழுக்கக் காய்ந்த செம்பைப்போல் ஆகிவிடும்.
Verse 70:9
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ
மலைகள் பஞ்சைப் போல் ஆகி (பறந்து) விடும்.
Verse 70:10
وَلَا يَسْـَٔلُ حَمِيمٌ حَمِيمًا
ஒரு நண்பன் மற்றொரு நண்பனை(ப் பார்த்த போதிலும் அவனுடைய சுகத்தை) விசாரிக்க மாட்டான்.
Verse 70:11
يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِ
அவர்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கொள்வார்கள். குற்றவாளி, அந்நாளில் தன் வேதனைக்குப் பரிகாரமாகத் தன் பிள்ளைகளையும்,
Verse 70:12
وَصَـٰحِبَتِهِۦ وَأَخِيهِ
தன் மனைவிகளையும், தன் சகோதரனையும்,
Verse 70:13
وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُـْٔوِيهِ
தன்னை ஆதரித்து வந்த தன் சொந்தக்காரர்களையும்,
Verse 70:14
وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ
இன்னும், பூமியிலுள்ள அனைத்தையுமே கொடுத்தேனும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப் பிரியப்படுவான்.
Verse 70:15
كَلَّآ ۖ إِنَّهَا لَظَىٰ
(எனினும்) அது ஆகக்கூடியதல்ல. நிச்சயமாக அது நரகத்தின் நெருப்பு. (இவனைச் சூழ்ந்து கொள்ளும்.)
Verse 70:16
نَزَّاعَةً لِّلشَّوَىٰ
அது தோல்களை எரித்து (மூளையை உருக்கி) விடும்.
Verse 70:17
تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ
புறம்காட்டிச் சென்று புறக்கணித்தவர்களை எல்லாம் அது அழைக்கும்.
Verse 70:18
وَجَمَعَ فَأَوْعَىٰٓ
(பொருளைச்) சேகரித்து(ச் செலவு செய்யாது) பத்திரப்படுத்தி வைத்திருந்தவர்களையும் (தன்னிடம் அழைக்கும்).
Verse 70:19
۞ إِنَّ ٱلْإِنسَـٰنَ خُلِقَ هَلُوعًا
மெய்யாகவே மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
Verse 70:20
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًا
ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால், (திடுக்கிட்டு) நடுங்குகிறான்.