Frequently Asked Questions about Surah Al-Layl
How many verses are in Surah Al-Layl?
There are 21 verses in Surah Al-Layl.
Is Surah Al-Layl a Meccan or Medinan Surah?
Surah Al-Layl is a Meccan Surah.
Arabic Text and Translation
Verse 92:1
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ
(அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
Verse 92:2
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக!
Verse 92:3
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ
ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
Verse 92:4
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன.
Verse 92:5
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ
ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து,
Verse 92:6
وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ
(இந்த மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கிறாரோ,
Verse 92:7
فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ
அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் எளிதாக்கித் தருவோம்.
Verse 92:8
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ
எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது,
Verse 92:9
وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ
(இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கிறானோ,
Verse 92:10
فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ
அவனுக்குக் (கஷ்டத்திற்குரிய) நரகப் பாதையைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்.
Verse 92:11
وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ
அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால், அவனுடைய பொருள் அவனுக்கு (ஒரு) பயனுமளிக்காது.
Verse 92:12
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பது நம்மீதுதான் கடமையாகும்.
Verse 92:13
وَإِنَّ لَنَا لَلْـَٔاخِرَةَ وَٱلْأُولَىٰ
நிச்சயமாக இம்மையும், மறுமையும் நமக்கே சொந்தமானவை!
Verse 92:14
فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ
(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.
Verse 92:15
لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى
மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான்.
Verse 92:16
ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ
அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான்.
Verse 92:17
وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى
இறையச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்.
Verse 92:18
ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ
அவர் (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன் பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்.
Verse 92:19
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍ تُجْزَىٰٓ
தான் பதில் நன்மை செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் தன் மீது இருக்காது.
Verse 92:20
إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ
இருப்பினும், மிக்க மேலான தன் இறைவனின் திருமுகத்தை விரும்பியே தவிர (வேறு எதற்காகவும் தானம் செய்ய மாட்டார்).