Frequently Asked Questions about Surah Al-Infitar
How many verses are in Surah Al-Infitar?
There are 19 verses in Surah Al-Infitar.
Is Surah Al-Infitar a Meccan or Medinan Surah?
Surah Al-Infitar is a Meccan Surah.
Arabic Text and Translation
Verse 82:1
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ
(உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால்,
Verse 82:2
وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ
நட்சத்திரங்கள் சிதறிவிட்டால்,
Verse 82:3
وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ
கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால்,
Verse 82:4
وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ
சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,)
Verse 82:5
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ
ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவற்றையும் நன்கறிந்துகொள்ளும்.
Verse 82:6
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ
மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது?
Verse 82:7
ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னைப் படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான்.
Verse 82:8
فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ
அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன் அவயங்களைப் பொறுத்தினான்.
Verse 82:9
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
எனினும், (மனிதர்களே!) நீங்கள் கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகிறீர்கள்.
Verse 82:10
وَإِنَّ عَلَيْكُمْ لَحَـٰفِظِينَ
நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
Verse 82:11
كِرَامًا كَـٰتِبِينَ
அவர்கள் (வானவர்களில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்.
Verse 82:12
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
நீங்கள் செய்பவற்றையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்.
Verse 82:13
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ
ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள்.
Verse 82:14
وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍ
நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்.
Verse 82:15
يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ
கூலி கொடுக்கும் நாளில் அதையே அவர்கள் அடைவார்கள்.
Verse 82:16
وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ
அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது.
Verse 82:17
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ
(நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீர் அறிவீரா?
Verse 82:18
ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ
பிறகு, கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உமக்கு எவரேனும் அறிவித்தனரா?
Verse 82:19
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ
அந்நாளில் ஓர் ஆத்மா, மற்றோர் ஆத்மாவுக்கு ஒரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும்.