Surah Al-Alaq
Surah Al-Alaq (The Clot) is Surah 96 of the Holy Quran, a Meccan Surah with 19 verses, available here in Tamil.
Verse 96:1
اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِیْ خَلَقَ ۟ۚ
ʹIq̣raʹ bismi Rab-bikal laẓee khalaq̣,
(நபியே! அனைத்தையும்) படைத்த உமது இறைவனின் பெயரால் (அவனது கட்டளைகள் அடங்கிய திரு குர்ஆனை) ஓதுவீராக!
Verse 96:2
خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ ۟ۚ
Khalaq̣al ʹiñsaana min ʻalaq̣.
அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைக்கிறான்.
Verse 96:3
اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُ ۟ۙ
ʹIq̣raʹ wa-Rabbukal ʹAkram,―
(நபியே! மேலும்) நீர் ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளி!
Verse 96:4
الَّذِیْ عَلَّمَ بِالْقَلَمِ ۟ۙ
ʹAllaẓee ʻallama bil-Q̣alam,―
அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்.
Verse 96:5
عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ یَعْلَمْ ۟ؕ
ʻAl-lamal ʹiñsaana maa- lam yaʻlam.
(அதன் மூலம்) மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்.
Verse 96:6
كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَیَطْغٰۤی ۟ۙ
Kallaaa ʹinnal ʹiñsaana layaṭg̣aa,
, 7. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
Verse 96:7
اَنْ رَّاٰهُ اسْتَغْنٰی ۟ؕ
ʹArra ʹaahus tag̣naa.
, 7. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
Verse 96:8
اِنَّ اِلٰی رَبِّكَ الرُّجْعٰی ۟ؕ
ʹInna ʹilaa Rabbikar rujʻaa.
நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் (அவன்) மீள வேண்டும்.
Verse 96:9
اَرَءَیْتَ الَّذِیْ یَنْهٰی ۟ۙ
ʹA-raʹaytal laẓee yanhaa
(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
Verse 96:10
عَبْدًا اِذَا صَلّٰی ۟ؕ
ʻAbdan ʹiẓaa ṣallaa?
(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
Verse 96:11
اَرَءَیْتَ اِنْ كَانَ عَلَی الْهُدٰۤی ۟ۙ
ʹA-raʹayta ʹiñ kaana ʻalal Hudaa?
அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
Verse 96:12
اَوْ اَمَرَ بِالتَّقْوٰی ۟ؕ
ʹAw ʹamara bit-Taq̣waa?
அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
Verse 96:13
اَرَءَیْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ
ʹA-raʹayta ʹiñ kaẓ-ẓaba wa-tawallaa?
(அவன், அவரைப்) பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீர் கவனித்தீரா?
Verse 96:14
اَلَمْ یَعْلَمْ بِاَنَّ اللّٰهَ یَرٰی ۟ؕ
ʹAlam yaʻlam̃ biʹannal laaha yaraa?
(அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
Verse 96:15
كَلَّا لَىِٕنْ لَّمْ یَنْتَهِ ۙ۬ لَنَسْفَعًا بِالنَّاصِیَةِ ۟ۙ
Kallaa laʹil lam yañtahi lanasfaʻam bin-naaṣiyah,―
, 16. (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
Verse 96:16
نَاصِیَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۟ۚ
Naaṣiyatiñ kaaẓibatin khaaṭiʹah!
, 16. (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
Verse 96:17
فَلْیَدْعُ نَادِیَهٗ ۟ۙ
Fal-yadʻu naadiyah:
ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும்.
Verse 96:18
سَنَدْعُ الزَّبَانِیَةَ ۟ۙ
Sanadʻuz zabaaniyah!
நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.
Verse 96:19
كَلَّا ؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۟
Kallaa: laa- tuṭiʻhu wasjud waq̣tarib!
(நபியே!) நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர். (உமது இறைவனுக்குச்) சிரம் பணிந்து வணங்கி (அவனை) நெருங்குவீராக!