Surah Abasa
Surah Abasa (He Frowned) is Surah 80 of the Holy Quran, a Meccan Surah with 42 verses, available here in Tamil.
Verse 80:1
عَبَسَ وَتَوَلّٰۤی ۟ۙ
ʻABASA wa-tawallaa,
(நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)
Verse 80:2
اَنْ جَآءَهُ الْاَعْمٰى ۟ؕ
ʹAñ jaaa-ʹahul ʹaʻmaa.
தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.
Verse 80:3
وَمَا یُدْرِیْكَ لَعَلَّهٗ یَزَّ ۟ۙ
Wa-maa yudreeka laʻallahoo yaz-zakkaa?―
(நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா?
Verse 80:4
اَوْ یَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰى ۟ؕ
ʹAw yaẓ-ẓak-karu fatañfaʻahuẓ Ẓikraa?
அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்?)
Verse 80:5
اَمَّا مَنِ اسْتَغْنٰى ۟ۙ
ʹAmmaa manis tag̣naa,
(நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ,
Verse 80:6
فَاَنْتَ لَهٗ تَصَدّٰى ۟ؕ
Faʹañta lahoo taṣaddaa;
அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.
Verse 80:7
وَمَا عَلَیْكَ اَلَّا یَزَّكّٰى ۟ؕ
Wa-maa ʻalayka ʹallaa yaz-zakkaa.
அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)!
Verse 80:8
وَاَمَّا مَنْ جَآءَكَ یَسْعٰى ۟ۙ
Wa-ʹammaa mañ jaaa-ʹaka yasʻaa,
எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ,
Verse 80:9
وَهُوَ یَخْشٰى ۟ۙ
Wa-huwa yakhshaa,
அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்.
Verse 80:10
فَاَنْتَ عَنْهُ تَلَهّٰى ۟ۚ
Faʹañta ʻanhu talahhaa.
எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்.
Verse 80:11
كَلَّاۤ اِنَّهَا تَذْكِرَةٌ ۟ۚ
Kallaaa ʹinnahaa Taẓkirah:
அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்.
Verse 80:12
فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ۟ۘ
Famañ shaaʹa ẓakarah.
எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.
Verse 80:13
فِیْ صُحُفٍ مُّكَرَّمَةٍ ۟ۙ
Fee ṣuḥufim mukarramah,
இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது);
Verse 80:14
مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍۭ ۟ۙ
Marfooʻatim muṭahharah,
உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; (அது) மிகப் பரிசுத்தமானது.
Verse 80:15
بِاَیْدِیْ سَفَرَةٍ ۟ۙ
Biʹaydee safarah―
எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது).
Verse 80:16
كِرَامٍ بَرَرَةٍ ۟ؕ
Kiraamim bararah.
(அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்.
Verse 80:17
قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗ ۟ؕ
Q̣utilal ʹiñsaanu maaa ʹakfarah?
(பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
Verse 80:18
مِنْ اَیِّ شَیْءٍ خَلَقَهٗ ۟ؕ
Min ʹayyi shayʹin khalaq̣ah?
எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)?
Verse 80:19
مِنْ نُّطْفَةٍ ؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۟ۙ
Min nuṭfah: khalaq̣ahoo faq̣addarah;
ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்.
Verse 80:20
ثُمَّ السَّبِیْلَ یَسَّرَهٗ ۟ۙ
S̤ummas sabeela yas-sarah;
பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்.
Verse 80:21
ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗ ۟ۙ
S̤umma ʹamaatahoo faʹaq̣barah;
பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான்.
Verse 80:22
ثُمَّ اِذَا شَآءَ اَنْشَرَهٗ ۟ؕ
S̤umma ʹiẓaa shaaaʹa ʹañsharah.
பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான்.
Verse 80:23
كَلَّا لَمَّا یَقْضِ مَاۤ اَمَرَهٗ ۟ؕ
Kallaa lammaa yaq̣ḍi maaa ʹamarah.
எனினும், நிச்சயமாக மனிதன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை.
Verse 80:24
فَلْیَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤ ۟ۙ
Falyañz̤̣uril ʹiñsaanu ʹilaa Ṭaʻaamih:
மனிதன் தன் உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்.
Verse 80:25
اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا ۟ۙ
ʹAnnaa ṣabab nalmaaaʹa ṣabbaa,
நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்தோம்,
Verse 80:26
ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّا ۟ۙ
S̤umma sha-q̣aq̣nal ʹarḍa shaq̣q̣aa;
பின்னர், பூமியையும் பிளந்(து வெடிக்கச் செய்)தோம்.
Verse 80:27
فَاَنْۢبَتْنَا فِیْهَا حَبًّا ۟ۙ
Faʹambatnaa feehaa Ḥabbaa,
பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கிறோம்.
Verse 80:28
وَّعِنَبًا وَّقَضْبًا ۟ۙ
Wa-ʻinabañw Waq̣aḍbaa,
(இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்,
Verse 80:29
وَّزَیْتُوْنًا وَّنَخْلًا ۟ۙ
Wa-zaytoonañw Wanakhlaa,
ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்,
Verse 80:30
وَّحَدَآىِٕقَ غُلْبًا ۟ۙ
Wa-ḥadaaaʹiq̣a g̣ulbaa,
கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்,
Verse 80:31
وَّفَاكِهَةً وَّاَبًّا ۟ۙ
Wa-faaki-hatañw Waʹabbaa,
கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்,
Verse 80:32
مَّتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْ ۟ؕ
Mataaʻal lakum wa-liʹanʻaamikum.
உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு (முளைக்க வைக்கிறோம்).
Verse 80:33
فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ ۟ؗ
Faʹiẓaa jaaa-ʹatiṣ Ṣaaakhkhah,―
(உலக முடிவின்பொழுது செவிகளை) செவிடாக்கும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்,
Verse 80:34
یَوْمَ یَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِیْهِ ۟ۙ
Yawma yafirrul mar-ʹu min ʹakheeh,
அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்,
Verse 80:35
وَاُمِّهٖ وَاَبِیْهِ ۟ۙ
Wa-ʹummihee wa-ʹabeeh,
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்,
Verse 80:36
وَصَاحِبَتِهٖ وَبَنِیْهِ ۟ؕ
Wa-ṣaaḥi-batihee wa-baneeh.
தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்).
Verse 80:37
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ یَوْمَىِٕذٍ شَاْنٌ یُّغْنِیْهِ ۟ؕ
Likul lim-riʹim minhum Yawmaʹiẓiñ shaʹnuñy yug̣neeh.
அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.
Verse 80:38
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ مُّسْفِرَةٌ ۟ۙ
Wujoohuñy Yawmaʹiẓim musfirah,
எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும்,
Verse 80:39
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۟ۚ
Ḍaaḥikatum mustabshirah.
சந்தோஷத்தால் சிரித்தவையாகவும் இருக்கும்.
Verse 80:40
وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍ عَلَیْهَا غَبَرَةٌ ۟ۙ
Wa-wujoohuñy Yawmaʹiẓin ʻalayhaa g̣abarah;
அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.
Verse 80:41
تَرْهَقُهَا قَتَرَةٌ ۟ؕ
Tarhaq̣uhaa q̣atarah:
கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).
Verse 80:42
اُولٰٓىِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ ۟۠
ʹUlaaaʹika humul kafaratul Fajarah.
இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.