Frequently Asked Questions about Surah Abasa
How many verses are in Surah Abasa?
There are 42 verses in Surah Abasa.
Is Surah Abasa a Meccan or Medinan Surah?
Surah Abasa is a Meccan Surah.
Arabic Text and Translation
Verse 80:1
عَبَسَ وَتَوَلَّىٰٓ
(நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)
Verse 80:2
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ
தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.
Verse 80:3
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
(நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா?
Verse 80:4
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ
அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்?)
Verse 80:5
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ
(நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ,
Verse 80:6
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.
Verse 80:7
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)!
Verse 80:8
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ
எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ,
Verse 80:9
وَهُوَ يَخْشَىٰ
அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்.
Verse 80:10
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்.
Verse 80:11
كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ
அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்.
Verse 80:12
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.
Verse 80:13
فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ
இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது);
Verse 80:14
مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ
உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; (அது) மிகப் பரிசுத்தமானது.
Verse 80:15
بِأَيْدِى سَفَرَةٍ
எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது).
Verse 80:16
كِرَامٍۭ بَرَرَةٍ
(அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்.
Verse 80:17
قُتِلَ ٱلْإِنسَـٰنُ مَآ أَكْفَرَهُۥ
(பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
Verse 80:18
مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ
எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)?
Verse 80:19
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்.
Verse 80:20
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்.