Frequently Asked Questions about Surah Al-Muddaththir
How many verses are in Surah Al-Muddaththir?
There are 56 verses in Surah Al-Muddaththir.
Is Surah Al-Muddaththir a Meccan or Medinan Surah?
Surah Al-Muddaththir is a Meccan Surah.
Arabic Text and Translation
Verse 74:1
يَـٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ
(நபியே! வஹ்யின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
Verse 74:2
قُمْ فَأَنذِرْ
நீர் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக;
Verse 74:3
وَرَبَّكَ فَكَبِّرْ
உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக;
Verse 74:4
وَثِيَابَكَ فَطَهِّرْ
உமது ஆடையைப் பரிசுத்தமாக்கி வைத்துக்கொள்வீராக;
Verse 74:5
وَٱلرُّجْزَ فَٱهْجُرْ
அசுத்தங்களை வெறுத்துவிடுவீராக.
Verse 74:6
وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ
எவருக்கும் நீர் (நன்மை) உபகாரம் செய்து, (அதைவிட) அதிகமாக (அவனிடம்) பெற்றுக்கொள்ளக் கருதாதீர்.
Verse 74:7
وَلِرَبِّكَ فَٱصْبِرْ
உமது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக (சிரமங்களை) நீர் பொறுத்திருப்பீராக.
Verse 74:8
فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ
எக்காளத்தில் (மகா ஊதுகுழாயில்) ஊதப்படும் சமயத்தில்,
Verse 74:9
فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ
அந்நாள் மிக்க கஷ்டமான நாளாகும்.
Verse 74:10
عَلَى ٱلْكَـٰفِرِينَ غَيْرُ يَسِيرٍ
(அந்நாள்) நிராகரிப்பவர்களுக்கு எளிதானதல்ல.
Verse 74:11
ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًا
(நபியே! நீர் சிபாரிசுக்கு வராது) என்னை(யும் அவனையும்) விட்டுவிடுவீராக. அவனை நான் தனியாகவே படைத்தேன்.
Verse 74:12
وَجَعَلْتُ لَهُۥ مَالًا مَّمْدُودًا
பின்னர், நான் அவனுக்கு ஏராளமான பொருளையும் கொடுத்தேன்.
Verse 74:13
وَبَنِينَ شُهُودًا
எந்நேரமும் அவனுடன் இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகளையும் (நான் அவனுக்குக் கொடுத்தேன்).
Verse 74:14
وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًا
அவனுக்கு வேண்டியவை எல்லாம் ஏற்கனவே அவனுக்காக தயார்படுத்தியும் வைத்தேன்.
Verse 74:15
ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ
பிறகு, நான் அவனுக்கு (மறுமையில்) இன்னும் அதிகமாகவும் கொடுப்பேன் என்றும் எதிர்பார்க்கிறான்.
Verse 74:16
كَلَّآ ۖ إِنَّهُۥ كَانَ لِـَٔايَـٰتِنَا عَنِيدًا
அவ்வாறு ஆகக்கூடியதல்ல. ஏனென்றால், நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு எதிரியாக இருக்கிறான்.
Verse 74:17
سَأُرْهِقُهُۥ صَعُودًا
அதிசீக்கிரத்தில் அவனை ஒரு சிரமமான சிகரத்தில் ஏற்றிவிடுவேன்.
Verse 74:18
إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ
நிச்சயமாக அவன் (இந்த குர்ஆனைப் பற்றி மிக மிகக்) கவனித்து (ஒரு பொய்யைக்) கற்பனை செய்தான்.
Verse 74:19
فَقُتِلَ كَيْفَ قَدَّرَ
அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்து விட்டான்!
Verse 74:20
ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ
பின்னும், அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்து விட்டான்! (ஒன்றுமில்லை.)