Frequently Asked Questions about Surah Al-Balad
How many verses are in Surah Al-Balad?
There are 20 verses in Surah Al-Balad.
Is Surah Al-Balad a Meccan or Medinan Surah?
Surah Al-Balad is a Meccan Surah.
Arabic Text and Translation
Verse 90:1
لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ
(நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
Verse 90:2
وَأَنتَ حِلٌّۢ بِهَـٰذَا ٱلْبَلَدِ
அதிலும் நீர் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில்.
Verse 90:3
وَوَالِدٍ وَمَا وَلَدَ
(மனிதர்களின்) தந்தை மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகள் மீதும் சத்தியமாக!
Verse 90:4
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِى كَبَدٍ
மெய்யாகவே நாம் மனிதனை சிரமத்தில் மூழ்கியவனாகவே படைத்திருக்கிறோம்.
Verse 90:5
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ
(அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா?
Verse 90:6
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا
‘‘ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்'' என்று, அவன் (கர்வம் கொண்டு பெருமையாகக்) கூறுகிறான்.
Verse 90:7
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ
அவ்வளவு பொருளை ஒருவருமே பார்த்திருக்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானோ?
Verse 90:8
أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ
(பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? (அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ளவில்லை.)
Verse 90:9
وَلِسَانًا وَشَفَتَيْنِ
(பேசக்கூடிய) ஒரு நாவையும், இரு உதடுகளையும் (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத் தானாகவே அவன் அடைந்துவிட்டானா?)
Verse 90:10
وَهَدَيْنَـٰهُ ٱلنَّجْدَيْنِ
(நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்;
Verse 90:11
فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ
எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை.
Verse 90:12
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ
(நபியே!) ‘அகபா' என்னவென்று நீர் அறிவீரா?
Verse 90:13
فَكُّ رَقَبَةٍ
அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது.
Verse 90:14
أَوْ إِطْعَـٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍ
16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
Verse 90:15
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ
16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
Verse 90:16
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ
16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
Verse 90:17
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ
பிறகு, எவர்கள் நம்பிக்கை கொண்டும் ஒருவருக்கொருவர் பொறுமையைக் கடைபிடிக்குமாறு நல்லுபதேசம் செய்துகொண்டும், கருணை காட்டவேண்டும் என்று ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்துகொண்டும் இருக்கிறார்களோ அவர்களிலும் அவர் சேர்ந்துவிடுவார்.
Verse 90:18
أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ
இவர்கள்தான் வலது பக்கத்தில் இருப்பவர்கள்.
Verse 90:19
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِنَا هُمْ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ
எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள்தான் இடப்பக்கத்தில் இருப்பவர்கள்.
Verse 90:20
عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢ
அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும்.